விழுப்புரம்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு சேகரிக்க வேட்பாளர்கள் பல்வேறு வழிமுறைகளைக் கையாளுகிறார்கள். அதில், மூத்த குடிமக்களின் காலில் விழுந்து வணங்கி வாக்கு கேட்பதும் ஒன்று.
கட்சி, ஊர் பேதமின்றி பல இளம் வேட்பாளர்கள் தயக்கமின்றி இவ்வாறு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருவாரூர் முதலாவது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மலர்விழி தன் கணவரோடு சேர்ந்து பிரசாரம் செய்வதுடன், வயதான வாக்காளர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிக்கிறார்.

