திருநெல்வேலி: நெல்லை பெருமாள்புரம் பகுதியில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் வாக்களிக்க பணம் வாங்கமாட்டோம் என உறுதியாக உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "வாக்குக்குப் பணம் வாங்கினால் வெற்றிபெறும் வேட்பாளர்கள் நல்லது செய்யமாட்டார்கள். மக்களுக்கு சேவை செய்யும் நல்ல வேட்பாளர்களையே நாங்கள் தேர்வு செய்வோம்," என்றனர்.
இதேபோல், செங்கல்பட்டு மாவட்டம், இடைக்கழிநாடு பேரூராட்சியில் உள்ள ஆனியன் தோட்டப் பகுதி மக்களும் எந்த ஒரு தேர்தல் என்றாலும் வாக்குக்காக இவர்கள் பரிசோ, பணமோ வாங்குவது இல்லை. ஆகவே, யாரும் பணம், இலவசப் பொருள்களுடன் கிராமத்துக்குள் வரவேண்டாம். வாக்குரிமை என்பது எங்கள் உரிமை. நாங்கள் சுதந்திரமாக, பிடித்தவர்களுக்கு வாக்கு அளிப்போம் என்று கூறியுள்ளனர்.

