இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது

இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது

2 mins read
30bc2925-f3f1-4b32-b662-04976ec09b89
ககன்தீங் சிங் பேடி.படம்: தகவல் ஊடகம் -

சென்னை: நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லுக்­கான பிர­சா­ரம் இன்று மாலை­யு­டன் முடி­வுக்கு வரு­கிறது.

இதை­ய­டுத்து அர­சி­யல் கட்­சி­யினர் தீவிர பிர­சா­ரம் மேற்­கொண்டு வாக்கு சேக­ரிப்­பில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

இம்­முறை தேர்­தல் களத்­தில் எட்டு முனைப் போட்டி நில­வு­கிறது. திமுக கூட்­டணி, அதி­முக, பாஜக, பாமக, தேமு­திக, மநீம, அம­முக, நாம் தமி­ழர் சார்­பில் வேட்­பா­ளர்­கள் கள­மி­றக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இவை தவிர, சில உதி­ரிக் கட்சி­களும் நடி­கர் விஜய்­யின் மக்­கள் இயக்­கத்­தைச் சேர்ந்­த­வர்­களும் ஆங்­காங்கே போட்­டி­யி­டு­கின்­ற­னர்.

தேர்­தல் களத்­தில் ஏதே­னும் முறை­கே­டு­கள் நடக்­கின்­ற­னவா என்­பதை கண்­கா­ணிக்க மாநி­லத் தேர்­தல் ஆணை­யம் அதி­கா­ரி­களை நிய­மித்­துள்­ளது. பறக்­கும் படை­களும் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

இது­வரை மாநி­லம் முழு­வ­தும் ரூ.9.28 கோடி மதிப்­புள்ள ரொக்­கப்­பணம், பொருள்­கள், மதுப்புட்­டி­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளன.

உரிய ஆவ­ணங்­கள் இன்றி எடுத்­துச் செல்­லப்­படும் பொருள்­கள் பறி­மு­தல் செய்­யப்­படும் என்­றும் வாக்­குப்­ப­திவு முடி­யும் வரை இந்த நட­வ­டிக்கை நீடிக்­கும் என்­றும் மாநில தேர்­தல் ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே, சென்­னை­யில் பறக்­கும் படை­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­பட உள்­ள­தாக சென்னை மாந­க­ராட்சி ஆணை­ய­ரும் மாவட்ட தேர்­தல் அலு­வ­ல­ரு­மான ககன்­தீங் சிங்­ பேடி தெரி­வித்­துள்­ளார்.

கடைசி நேரத்­தில் வாக்­கா­ளர்­க­ளைக் கவர பணப்­பட்­டு­வாடா நடக்­க­லாம் என்று கூறப்­ப­டு­வ­தால் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­ப­டு­வதா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஏற்­கெ­னவே, 45 பறக்­கும் படை­கள் செயல்­பட்டு வரும் நிலை­யில், மேலும் 45 படை­கள் அமைக்­கப்­ப­டு­வ­தாக ககன்­தீங் சிங் ­பேடி கூறி­யுள்­ளார். சென்னை மட்­டு­மல்­லா­மல், மாநி­லம் முழு­வ­தும் வாக­னச் சோதனை நட­வ­டிக்கை தீவி­ர­ம­டைந்­துள்­ளது.

உள்­ளாட்­சித் தேர்­த­லை­யொட்டி தமி­ழ­கத்­தில் மூன்று நாள்­க­ளுக்கு மதுக்­க­டை­கள் மூடப்­பட உள்­ளன.

இத­னால் நேற்று மதுக்­க­டை­களில் கூட்­டம் முண்­டி­ய­டித்­தது. பலர் மூன்று நாள்­க­ளுக்­கும் தேவை­யான மதுப்­புட்­டி­களை மொத்­த­மாக வாங்கி அள்­ளிச் சென்­ற­னர்.

நேற்று ஒரே நாளில் 200 கோடி ரூபாய் மதிப்­புள்ள மது வகை­கள் விற்­ப­னை­யாகி இருக்­கக்­கூ­டும் என ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. நாளை மறுதினம் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதிகரிக்கும் தேர்தல் பறக்கும் படைகள்; தீவிர கண்காணிப்பு