சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று ஏறிய வேகத்தில் இறங்கி வருவதை அடுத்து, சென்னை விமான நிலையத்தில் விமானச் சேவைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பரிசோதனை, தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம், ஏழு நாள்கள் தனிமைப்படுத்துதல் போன்றவை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. அதனால், பயணி களின் எண்ணிக்கை மீண்டும் 20,000ஐ கடந்துள்ளது. விமானங்கள் இயக்கமும் அதிகரித்துள்ளது. அேதபோல், இப்போது சிறப்பு விமானங்களும் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன.