இலங்கை கடற்படை சிறைபிடித்த 47 மீனவர்கள் சென்னை திரும்பினர்

இலங்கை கடற்படை சிறைபிடித்த 47 மீனவர்கள் சென்னை திரும்பினர்

1 mins read
1e477634-03cb-4d1c-ae50-ec6e0174f5b1
தமிழகம் வந்த மீனவர்களில் ஒரு பகுதியினர். படம்: ஊடகம் -

சென்னை: இலங்கை சிறை­யில் இருந்து விடு­விக்­கப்­பட்ட 47 தமி­ழக மீன­வர்­கள் தாய­கம் திரும்­பி­னர். சென்னை விமா­ன நிலை­யம் வந்­த­டைந்­த­வர்­கள் வெவ்­வேறு வாக­னங்­களில் சொந்த ஊருக்­குப் பய­ணம் சென்­ற­னர்.

ராமேஸ்­வ­ரம், நாகப்­பட்­டினம், புதுக்­கோட்டை மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த மீன­வர்­கள் எல்லை தாண்டி மீன்­பி­டித்­த­தா­கக் கூறி, கடந்த 2021 டிசம்­ப­ரில் 56 மீன­வர்­களை இலங்கை கடற்­படையினர் கைது செய்­தனர்.

இைதத்தொடர்ந்து யாழ்ப்­பா­ணம் சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில், அவர்­களை மீட்க மத்­திய-மாநில அர­சு­கள் நட­வ­டிக்­கை­கள் எடுத்­தன.

மீன­வர்­கள் 56 பேரை­யும் கடந்த மாதம் இலங்கை நாட்டு நீதி­மன்­றம் விடு­தலை செய்­தது.

இதை­ய­டுத்து, இலங்­கை­யில் உள்ள இந்­திய தூத­ரக அதி­கா­ரி­களி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­னர்.

இவர்­களில் பல மீன­வர்­க­ளுக்கு கொவிட்-19 தொற்று இருந்­தது உறு­தி­யான நிலை­யில், அவர்­களை உட­னடி­யாக இந்­தி­யா­வுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது. இலங்கையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்­டது.

பாதிப்பு இல்­லாத ஒன்­பது மீன­வர்­கள் மட்­டும் கடந்த 10ஆம் தேதி தமி­ழ­கம் வந்து சேர்ந்­த­னர்.

மீத­முள்ள 47 மீன­வர்­க­ளும் கொரோனா தொற்­றில் இருந்து முற்­றி­லும் குண­ம­டைந்த நிலை­யில் நேற்று அதி­காலை விமா­னம் மூலம் சென்னை வந்து சேர்ந்த­னர். மீன்­வளத் துறை அதி­கா­ரி­கள் அவர்­களை வர­வேற்று சொந்த ஊர்­க­ளுக்கு அனுப்­பி­வைத்­த­னர்.