செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
32dc9b75-6181-474c-9e96-1f89aeffb7bd
-

ருமே­னியா நாட்­ட­வ­ருக்கு நோட்­டீஸ்

சென்னை: கோவை­யில் திமுக வேட்­பா­ள­ருக்கு ஆத­ர­வாக பிர­சா­ரம் செய்த ருமே­னியா நாட்­டைச் சேர்ந்த நேகோய்டா ஸ்டீ­பன் மாரி­யஸ் என்­ப­வ­ருக்கு விசா விதி­மு­றையை மீறி­ய­தாக மத்­திய அர­சின் கீழ் இயங்­கும் குடி­யு­ரிமைத் துறை அதி­கா­ரி­கள் நோட்­டீஸ் அனுப்பி உள்­ள­னர்.

விதி­மீ­றல் குறித்து விளக்­கமளிக்க உரிய ஆவ­ணங்­ களு­டன் சென்னை சாஸ்­திரி பவன் அலு­வ­ல­கத்துக்கு வரும்படியும் நேகோய்டாவுக்கு அதி­கா­ரி­கள் கூறி­யுள்­ள­னர்.

'உங்­களில் ஒரு­வன்' நூலை வெளி­யி­டு­ம் ராகுல் காந்தி

சென்னை: தமி­ழக முதல்­வ­ரும் திமுக தலை­வ­ரு­மான மு.க.ஸ்டா­லின் எழு­திய 'உங்­களில் ஒரு­வன்' நூலை சென்­னை­யில் இம்­மா­தம் 28ஆம் தேதி ராகுல் காந்தி எம்.பி. சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு வெளி­யிட உள்­ள­தாக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் பேசினாா். கேரள முதல்வா் பின­ராயி விஜ­யன், ஜம்மு காஷ்மீா் மாநி­ல முன்­னாள் முதல்வா் உமா் அப்­துல்லா, பீகார் மாநி­லத்­தின் எதிா்க்­கட்­சித் தலைவா் தேஜஸ்வி ஆகியோரும் கலந்­து­கொள்­ள உள்ளனர். திமுக பொதுச்­செ­யலா் துரை­மு­ரு­கன் தலை­மை­யில் நடை­பெ­றும் இவ்விழா­வில் கவிஞா் வைர­முத்து, நடிகா் சத்­ய­ராஜ் ஆகியோா் சிறப்­பு­ரை­யாற்­ற உள்­ளனா் என்­றும் முதல்வர் கூறி­யுள்­ளார்.

காரைக்­குடி-திருச்சி இடையே தொடர்ந்த சோதனை ஓட்­டம்

காரைக்­குடி-திருச்சி இடையே சோதனை ஓட்­ட­மாக இயக்­கப்­பட்ட மின்­சார ரயில். படம்: ஊடகம்

காரைக்­குடி: திருச்சி-புதுக்­கோட்டை-காரைக்­குடி இடையே ரயில் பாதையை மின்­ம­ய­மாக்­கும் பணி நிறை­வ­டைந்­தது. இத­னையடுத்து காரைக்­குடி-திருச்சி ரயில் பாதை­யில் முதன்­மு­த­லாக மின்­சார ரயிலை இயக்கி சோதனை நடத்திப் பார்த்தனர். தமி­ழ­கத்­தில் உள்ள அனைத்து ரயில் வழித்­த­டங்­க­ளை­யும் 2027க்குள் மின்­ம­ய­மாக்க ரயில்வே நிர்வாகம் திட்­ட­மிட்­டுள்­ளது.

இந்நிலையில், காரைக்­குடி ரயில் நிலை­யத்­தில் தயா­ராக இருந்த மின்­சா­ர­ ர­யிலுக்கு சந்­த­னம், குங்­கு­மம், மலர்­மாலை அணி­வித்து, தேங்­காய் உடைத்து வழி­பாடு செய்த பின்னர் காரைக்­குடி-புதுக்­கோட்டை-திருச்சி வழித்­த­டத்­தில் மின்­சார ரயிலின் சிறப்புச் சோதனை ஓட்­டம் நடை­பெற்­றது.