வேட்பாளர்: கடத்தவில்லை; சிகிச்சை பெற்று வருகிறேன்

வேட்பாளர்: கடத்தவில்லை; சிகிச்சை பெற்று வருகிறேன்

1 mins read
797b1699-d04d-46e2-8964-7f171c2b1479
-

வேலூர்: திமு­க­வி­னர் உயி­ருக்கு மிரட்­டல் விடுக்­கும் வகை­யில் பேசி­ய­தால், வேலூர் மாந­க­ராட்­சியில் 11வது வார்­டில் போட்­டி­யிடும் அதி­முக வேட்­பா­ளர் சுகேந்­தி­ரன் காணா­மல் போய்­விட்­ட­ார். கடத்தப்பட்டுள்ள அவரைக் கண்டு­பி­டித்து தரும்படி அதி­மு­க­வி­னர் புகார் அளித்த நிலை­யில், தான் மருத்­துவமனை­யில் இருக்­கும் காணொ­ளியை வெளி­யிட்­டுள்­ளார் சுகேந்­தி­ரன்.

அதில், "திடீ­ரென 17ஆம் தேதி இரவு எனக்கு உடல்நிலை சரி­யில்­லா­மல் போய்­விட்­டது. எனது மனைவி, மாப்­பிள்ளை உட­ன­டி­யாக விடி­யற்­காலை 4.30 மணிக்கு என்னை பெங்­க­ளூ­ருக்கு அழைத்து வந்து மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்தனர். இப்போது நன்றாக உள்ளேன். என்னை யாரும் கடத்­த­வில்லை. உடல் சுமா­ராக உள்­ளது. யாரும் பயப்­பட வேண்­டாம்," என்று கூறியுள்ளார்.