செவ்வக வடிவிலான தந்தப் பகடைக்காய் கண்டெடுப்பு

செவ்வக வடிவிலான தந்தப் பகடைக்காய் கண்டெடுப்பு

1 mins read
88771fb4-8330-42ab-b135-c3d8da1a0a9e
-

சிவ­கங்கை: சிவ­கங்கை மாவட்­டத்தில் உள்ள கீழடி கிரா­மத்­தில், எட்­டாம் கட்ட அக­ழாய்­வுப் பணி­களைக் கடந்த 11ஆம் தேதி முதல் வர் மு.க.ஸ்டா­லின் காணொளி வழி தொடங்கி வைத்­தார்.

அகழாய்­வுப் பணி­கள் நிறை­வடை­யும்­போது கீழ­டி­யில் திறந்­த­வெளி அருங்­காட்­சி­ய­கம் அமைப்ப தற்கு மாநில அரசு திட்­ட­மிட்­டுள்­ள ­நி­லை­யில், புதிதாக இப்ேபாது தந்­தத்­தால் செய்யப்பட்ட செவ்­வக வடி­வி­லான பக­டைக்­காய் கண்டு எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இதுகுறித்து தமிழக தொழில்­துறை அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு தனது டுவிட்டர் பதிவில், "கீழடி­ யில் குழிதோண்­டும் பணி­யின்­போது செவ்­வக வடி­விலான பக­டைக்­காய் கிடைத்­துள்­ளது.

"இது­வரை கன­ச­துர வடி­வில் மட்­டுமே பொருள்கள் கிடைத்­து­வந்த நிலையில், தற்­போது செவ்­வக வடி­வில் தந்தத்தில் பகடைக்காய் கிடைத்­துள்­ளது," என பகிர்ந்­துள்­ளார்.