காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரவுடி சங்கரின் ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துகளை சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் பிபிஜிடி சங்கர். இவருக்கு எதி ராக கொலை, கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல் உள்பட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், அவர் தொழி லதிபர்களைத் தொடர்ந்து மிரட்டி பணம் பறித்து வருவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து அவரைப் பிடிக்க தனிப்படை காவல்துறையினர் களம் இறங்கியதை அடுத்து, நேற்று முன்தினம் துப்பாக்கி முனையில் கைதானார். அவரிடமிருந்து பட்டாக்கத்தி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சங்கர், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சங்கருக்குச் சொந்தமான ரூ.25 கோடி சொத்து களை அமலாக்கத்துறை முடக்கியது. சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ரவுடி சங்கர் மற்றும் அவரது பினாமிகளின் 79 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதப் பண பரிவர்த்தனை வழக்கில் ரவுடி சங்கரின் சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இத்தகவலை சென்னை அமலாக்கத்துறை உதவி இயக்குநர் ஏ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

