தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ. 9 கோடி சொத்து காணிக்கை

1 mins read
691906df-1210-4b72-9453-27b64c43a94e
திருப்பதி ஆலய அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டியிடம் தன் தங்கை பர்வதத்திற்குச் சொந்தமான வீடுகளின் பத்திரம், நகைகள், வங்கி ஆவணங்களை டாக்டர் ரேவதி விஸ்வநாத் ஒப்படைத்தார். இவற்றின் மொத்த மதிப்பு 9.2 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. படம்: தமிழக ஊடகம் -

திருப்­பதி: சென்னை பக்தை ஒரு­வர் திருப்­பதி பெரு­மா­ளுக்கு ரூ.9.2 கோடி சொத்­து­களை உயில் எழுதி வைத்­துள்­ளார். அந்தப் பத்திரம் நேற்று ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

சென்­னை­யைச் சேர்ந்த கல்­லுாரி பேரா­சி­ரியை திருப்­பதி ஏழு­ம­லை­யான் கோவி­லுக்கு எழுதி வைத்த ரூ.9.2 கோடி மதிப்­புள்ள சொத்­து­களை நேற்று அவ­ரது அக்கா டாக்டர் ரேவதி ஒப்­ப­டைத்­தார்.

சென்னை மயி­லாப்­பூ­ரைச் சேர்ந்­த­வர் பர்­வ­தம். இவர், கல்­லுாரி பேரா­சி­ரி­யை­யாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்­ற­வர். திரு­ம­ணம் செய்து கொள்­ள­வில்லை.

ஏழு­ம­லை­யா­னின் தீவிர பக்­தை­யான இவர், திருப்­பதி ஏழு­ம­லை­யான் கோவி­லுக்கு ஏரா­ள­மாக நன்­கொடை வழங்கியுள்­ளார். இவர் தன் 76வது வய­தில் கடந்த ஆண்டு மே மாதம் கால­மா­னார்.

இவ­ருக்கு சென்­னை­யில் உள்ள வீடுகளின் மதிப்பு ரூ.6 கோடி என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவர், தனது இரு வீடு­கள், நகை­கள், வங்­கி­யில் வைத்­துள்ள பணம் ஆகி­ய­வற்றை தன்னுடைய மறை­வுக்­குப் பிறகு திருப்­பதி ஆலயத்­திடம் ஒப்­ப­டைக் கும்படி தனது அக்கா ரேவதி விஸ்­வ­நா­த­னி­டம் சத்தியம் வாங்கி யிருந்தார். மேலும், அந்த இடத்­தில் குழந்­தை­க­ளுக்­கான சிறப்பு பல்­நோக்கு மருத்­து­வ­மனை கட்ட வேண்­டும் என­வும் கூறி­யி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், பர்­வ­தத்­தின் சகோ­தரி டாக்­டர் ரேவதி விஸ்­வ­நாத் நேற்று தன் குடும்­பத்­தி­ன­ருடன் திருப்­பதிக்கு வந்து, ஆலய அறங்­கா­வ­லர் குழுவினரிடம் சொத்துப் பத்திரங்கள், நகைகள், பணம் ஆகியவற்றை ஒப்படைத்தார்.