சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலை அமைதியாக நடத்துவதற்கு ஏதுவாக, வழக்கம்போல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மட்டும் செய்யாமல், மாநிலத் தேர்தல் ஆணையமும் தமிழக காவல்துறையும் சற்று கூடுதல் ஏற்பாடு களையும் செய்துள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும் அமைதி யைக் குலைக்கும் வகையில் செயல்படும் ஆயிரக்கணக்காேனா ரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அத்துடன், பதற்றமான வாக்குச்சாவடிகளில் 'வெப் கேமரா' பொருத்தப்பட்டு நேரடியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க உள்ளனர்.
சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் பதவிகளுக்கு இன்று 31,029 வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பு நடைபெறுகிறது.
கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க வாக்குச்சாவடிகளில் வெப்ப மானி, கிருமிநாசினி, முகக்கவசம், கையுறைகள், பாதுகாப்புக் கவசம் ஆகியன தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பணியில் 133,000 பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள்.
வாக்குப்பதிவின்போது மாநிலம் முழுவதும் 113,073 காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாகவும் சென்னையில் 18,000 காவலர்கள் பாதுகாப்பு வழங்க உள்ளதாகவும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கொரோனா பாதிப்பு காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட பெரும்பாலா னோர் கடன் வாங்கி இத்தேர்தலுக் காக செலவு செய்துள்ளனர். இத னால் 'வென்றால் மன்னன், தோற்றால் நாடோடி' என்ற நிலையே பெரும்பாலான வேட்பாளர்களின் மனநிலையாக உள்ளது.
பல்லாயிரம் வேட்பாளர்களின் நிலை இத்தேர்தலில் தோற்றால் கேள்விக்குறியாகிவிடும் என்பதால், பெரும்பாலானோர் வெற்றியை நோக்கியே காய் நகர்த்தி உள்ளனர். இதற்காக பலரும் தங்கள் வரம்புகளை மீறி செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்போதைய வாக்களிப்பில் எந்தப் பிரச்சிைனயும் ஏற்படக்கூடாது என்பதில் தேர்தல் ஆணையமும் காவல்துறை நிர்வாகமும் கூடுதல் கவனத்துடன் கைகோத்துள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

