பரமத்தி வேலூர்: பரமத்தி வேலூரில் உள்ள ராஜாநகர் பகுதியில் வாக்களிப்பதற்காக நீண்ட தூரம் செல்ல வேண்டியிருப்பதாகக் கூறி அப்பகுதி மக்கள் தேர்தலைப் புறக்கணித்தனர்.
மேலும், வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி வைத்ததுடன், சாலையில் ஒன்றுகூடி கையில் கறுப்புக் கொடியுடன் போராட்டம் நடத்தினர்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் பேரூராட்சி செயல் அலுவலர் நடவடிக்கை எடுக்கவில்லை என அம்மக்கள் புகார் தெரிவித்தனர்.
படம்: தமிழக ஊடகம்

