ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இதுகுறித்து தமிழக மீன்வளத்துறை அலுவலரிடமும், கடலோரக் காவல்படை குழுமத்திடமும் மீனவர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். கோடியக்கரை கடற்பகுதியில், அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென இலங்கை கடற்கொள்ளையர்கள் அங்கு வந்தனர்.
பின்னர் தமிழக மீனவர்களை கத்தியைக் காட்டி மிரட்டிய கொள்ளையர்கள் மீன் வலைகள், பெட்ரோல், கைபேசிகள், ஜிபிஎஸ் கருவிகள் என ரூ.50,000 மதிப்புள்ள பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

