அதிமுக: 26 மையங்களில் மறுதேர்தல் அவசியம்

அதிமுக: 26 மையங்களில் மறுதேர்தல் அவசியம்

1 mins read
340bdea2-b40b-49a7-83d2-a9c1375abf3c
-

சென்னை: நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­தல் வாக்­குப்­ப­தி­வின்­போது ஒரு­சில இடங்­களில் ஆளுங்­கட்சி­யி­னர் முறை­கேட்­டில் ஈடு­பட்­ட­தாக அதி­முக, பாஜக, மநீம உள்­ளிட்ட கட்­சி­கள் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளன.

முறை­கேடு நடை­பெற்ற 26 வாக்­குப்­ப­திவு மையங்­களில் மறு­வாக்­குப் பதிவு நடத்­தக் கோரி அதி­முக சார்­பில் மாநி­லத் தேர்­தல் ஆணை­யத்­தில் மனு அளிக்­கப்­பட்­டுள்­ளது.

இது­தொ­டர்­பாக மாநிலத் தேர்­தல் ஆணை­யர் பழ­னி­கு­மாரை சந்­தித்து அதி­முக சட்­டப்­பி­ரிவு இணைச் செய­லா­ளர் பாபு முரு­க­வேல் புகார் மனு அளித்­தார்.

அதில், முறை­கேடு நடை­பெற்ற வார்­டு­க­ளுக்கு மறு­வாக்­குப்­ப­திவு நடத்­த­வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

சென்­னை­யில் வாக்­குச்­சா­வடி­கள் கைப்­பற்­றப்­பட்டு கள்ள வாக்­கு­கள் போட்­டப்­பட்­டுள்­ள­தாக சென்னை மாந­கர காவல் ஆணை யரி­ட­மும் அதி­முக புகார் அளித்­துள்­ளது.

பாபு முரு­க­வேல் செய்­தி­யாளர்­க­ளி­டம் கூறு­கை­யில், "சென்­னை­யில் பல வாக்­குச்­சா­வடி­களில் இருந்த முக­வர்­கள் விரட்டி­ய­டிக்­கப்­பட்­டுள்­ள­னர். பல இடங்­களில் வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் நடந்துள்­ளன. திமு­க­வி­னர் கள்ள வாக்கு போட்­டது தொடர்­பான காணொ­ளியை காவல் ஆணை­ய­ரி­டம் வழங்­கி­யுள்­ளோம்," என்­றார்.

இதே­போல், மாநி­லம் முழு வதும் வாக்­குப்­ப­தி­வில் முறை­கேடு நடை­பெற்­றுள்­ள­தாக மநீம கட்சி யினர் கோயம்­பேடு தேர்­தல் ஆணை­யர் அலு­வ­ல­கம் முன்பு ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். தேர்­தலை ரத்து செய்­ய­வேண்­டும் எனவும் அவர்­கள் கூறினர்.