ஆறு மீனவர்களுக்கு மார்ச் 4 வரை சிறை

ஆறு மீனவர்களுக்கு மார்ச் 4 வரை சிறை

2 mins read
a15f1f65-6203-4dd6-95ec-067347ba9aa4
-

கொழும்பு: ராம­நா­த­பு­ரம் மாவட்­டம், நம்­பு­தாளை பகு­தி­யைச் சேர்ந்த ஆறு மீன­வர்­கள் தங்­க­ளது எல்லை யைத் தாண்டி மீன்­பி­டித்­த­தா­கக் கூறி இலங்கை கடற்­ப­டை­யி­னர் கைது செய்­த­னர்.

அத்­து­டன், மீன­வர்­க­ளின் பட­கு­க­ளை­யும் பறி­மு­தல் செய்த இலங்கை கடற்­ப­டை­யி­னர், அவர்­களை இலங்கை மய­லிட்டி துறை­மு­கத்­திற்கு அழைத்­துச் சென்று விசா­ரணை நடத்­தி­னர். இதைத்­தொ­டர்ந்து, அந்­நாட்டு நீதி­மன்­றத்­தில் அவர்கள் முன்­னி­லைப்­படுத்தப் பட்டனர். ஆறு பேரை­யும் வரும் மார்ச் மாதம் 4ஆம் தேதி வரை யாழ்ப்­பா­ணம் சிறை­யில் அடைக்க அந்­நாட்டு நீதி­மன்­றம் உத்­தரவிட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, மத்­திய அரசு, இலங்கை அர­சைத் தொடர்பு கொண்டு இலங்கை சிறை­யில் அடைக்­கப்­பட்­டுள்ள தமி­ழக மீன­வர்­க­ளை­யும் பட­கு­க­ளை­யும் விடு­விக்க உட­னடி நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என­வும் தமி­ழக மீன­வர்­க­ளைப் பாது­காக்க இலங்­கை­யி­டம் மத்­திய அரசு பேச்­சு­வார்த்தை நடத்த வேண்­டும் என­வும் தமிழ் மாநில காங்­கி­ரஸ் தலை­வர் ஜி. கே. வாசன் வலி­யு­றுத்தி உள்­ளார்.

அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்கை யில், நேற்று முன்­தி­னம் நள்­ளி­ர­வில் கட­லில் மீன்­பி­டித்­துக்­கொண்­டி­ருந்த நாகை மீன­வர்­கள் ஆறு பேரை இலங்கை கடற்­ப­டை­யி­னர் கைது செய்­துள்­ள­னர். மேலும் படகு களை­யும் பறி­மு­தல் செய்­துள்­ள­னர். இது மிக­வும் கண்­டிக்­கத்­தக்­கது. இத­னால் மீன­வக் குடும்­பங்­கள் துய­ரத்­தில் உள்ளன.

தமி­ழக மீன­வர்­களை இலங்கை கடற்­ப­டை­யி­னர் கைது செய்­வ­தும் சிறை­யில் அடைப்­ப­தும் பட­கு­களை பறி­மு­தல் செய்­வ­தும் இதுதொடர்­பாக அர­சி­யல் கட்­சி­கள் கோரிக்கை வைப்­ப­தும் காலம் கடந்து மீன­வர்­கள் இலங்கை சிறை­யில் இருந்து விடு­விக்­கப்­ப­டு­வ­தும் தொடர்­க­தை­யாக நீள்­கிறது என்று கூறியுள்ளார்.

இதேபோல், பாமக இளை­ஞரணி தலை­வர் டாக்­டர் அன்­புமணி ராம­தாஸ் தனது டுவிட்­டர் பதி­வில்,

"ஆறு மீன­வர்­களைக் கைது செய்­தி­ருப்­பது இந்­திய இறை­யாண்­மைக்கு விடப்­பட்ட சவா­லா­கும். மீன­வர்­களை­ விடுவிக்க மத்­திய-மாநில அர­சு­கள் விரைந்து நட வடிக்கை எடுக்கவேண்­டும்," என்று வலி­யு­றுத்தி உள்­ளார்.