சிவகங்கை: வாக்களிப்பதற்காக அழைத்து வந்து தங்களுக்கான தேவை முடிந்தபின் பாதியிேலயே கழட்டி விட்டுச்சென்ற ஒரு மாற்றுத் திறனாளியை, பணியில் இருந்த காவல் அதிகாரி ஒருவர் தன் வாகனத்தில் அழைத்துச்சென்று அவரது வீட்டில் இறக்கிவிட்டு வந்துள்ளார். இச்செயலுக்குச் சமூக ஆர்வலர் களும் மக்களும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக சிறப்புத் துணை ஆய்வாளர் கண்ணன் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், வடிவேல் என்ற மாற்றுத்திறனாளியை அழைத்து வந்திருந்த வாக்குச்சாவடி முகவர் ஒருவர், வாக்களித்து விட்டு வந்த வடிவேலுவை திரும்ப அவரது வீட்டுக்கு அழைத்துச்செல்லாமல் அங்கேயே விட்டுவிட்டார்.
இதனால், தனது வீட்டுக்குத் திரும்பமுடியாமல் மணிக் கணக்கில் தவித்த வடிவேலை மற்றொரு காவலரை தனது பாதுகாப்புப் பணிக்கு அமர்த்திவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று அவ ரது வீட்டில் விட்டார் கண்ணன்.

