ஒன்பது மாட்டுவண்டிகளில் திருமணச் சீராக வழங்கப்பட்ட தமிழறிஞர்களின் படைப்புகள்

ஒன்பது மாட்டுவண்டிகளில் திருமணச் சீராக வழங்கப்பட்ட தமிழறிஞர்களின் படைப்புகள்

1 mins read
d511c519-7a9c-4c33-94ba-93dd74769366
புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்ற திருமண விழாவில் மணமக்களுக்கு தமிழறிஞர்களின் படைப்புகளைச் சீராக வழங்கிய வாட்ஸ்அப் குழுவினர். படம்: இந்து ஊடகம் -

புதுக்­கோட்டை: புதுக்­கோட்­டை­யில் நடை­பெற்ற திரு­மண விழா ஒன்­றில் புது­ம­ணத் தம்­ப­திக்­குத் தமிழ்ப் புத்­த­கங்­க­ளைச் சீர்­வ­ரி­சை­யா­கக் கொடுத்த நெகிழ்ச்சி சம்­ப­வம் நடந்­துள்­ளது.

செம்­மொ­ழி­யான தமிழ்­மொ­ழி­யின் சிறப்பை அடுத்து வரும் தலை­முறையின­ருக்கு கொண்டு செல்­லும் வித­மாக ஆசி­ரி­யர்­கள், மருத்து­வர்கள், தமிழ் ஆர்­வ­லர்­கள் உள்­ளிட்ட பல­ரை­யும் ஒருங்­கி­ணைத்து "தமி­ழினி வாட்ஸ்­அப் தளம்" செயல்­பட்டு வரு­கிறது.

இத்­த­ளத்­தின் கௌர­வத் தலை வராக முன்­னாள் சாகித்­திய அகா­டமி குழு­வின் உறுப்­பி­ன­ரும் புதுக்­கோட்­டை­யைச் சேர்ந்த கவி­ஞ­ரு­மான தங்­கம் மூர்த்தி இருந்து வரு­கி­றார். இந்­நி­லை­யில், இவ­ரது மகள் காவி­யா­மூர்த்­தி­யின் திரு­மண விழா பாரம்­ப­ரிய முறை­யில் நடை­பெற்­றது.

தம்­ப­தி­க­ளுக்கு மேளதாளங்­கள் முழங்க அலங்­க­ரிக்­கப்­பட்ட ஒன்­பது மாட்டு வண்­டி­களில் தமிழ்ப் புத்­த­கங்­களை வைத்து சீர்­வ­ரி­சை­யாக வழங்­கப்பட்­டது.

திரு­வள்­ளு­வர், ஔவை­யார், இளங்­கோ­வ­டி­கள், கம்­பர், பார­தி­யார், பார­தி­தா­சன், பட்­டுக்­கோட்டை கல்­யா­ண­சுந்­த­ரம், கண்­ண­தா­சன், வாலி ஆகிய கவி­ஞர்­கள் எழு­திய கவி நூல்­கள் மாட்டு வண்­டி­களில் ஊர்­வ­ல­மாக எடுத்து வரப்­பட்­டன.

மா, பலா, வாழை என முக்­கனி­கள், மலர்­க­ளைத் தட்­டில் ஏந்­திய படி­யும் தமி­ழர்­க­ளின் பாரம்­ப­ரிய இசைக்­க­ரு­வி­யான உருமி இசை முழங்க, மேள­தா­ளம் இசைக்க ஆட்­டம்பாட்­டத்­து­டன் இந்த ஊர்­வலம் நடை­பெற்­றது.