போலி தங்கக்காசு வழங்கி ஏமாற்றிவிட்டதாக சுயேச்சை வேட்பாளர் மீது வாக்காளர்கள் புகார்

போலி தங்கக்காசு வழங்கி ஏமாற்றிவிட்டதாக சுயேச்சை வேட்பாளர் மீது வாக்காளர்கள் புகார்

1 mins read
4867a130-860e-45ac-9657-7f942316369e
-

ஆம்­பூர்: தமி­ழ­கத்­தில் கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லின்­போது அர­சி­யல் கட்­சி­யி­னர், சுயேச்சை வேட்­பா­ளர்­கள் உள்­ளிட்ட பல­ரும் தங்­க­ளது வெற்­றிக்­காகப் பணம், பரி­சுப்­பொருள்­களை அன்­ப­ளிப்­பா­கக் கொடுத்­துள்­ள­னர்.

இதே­போல், திருப்­பத்­துார் மாவட்­டம், ஆம்­பூர் நக­ராட்­சி­யில் 36வது வார்­டில் சுயேச்சையாகப் போட்டி யிட்ட பெண் வேட்­பா­ளர், தங்­கக் காசு­களை அன்­ப­ளிப்­பாக வழங்கி­யுள்­ளார்.

ஆனால், அவர் வழங்­கிய காசு­கள் போலி­யான பித்­தளைக் காசு­கள் என்­பது உறு­தி­யாகி உள்­ளது.

"ஒரு­வர், இரு­வர் அல்ல. 1,500 பேரை ஏமாற்றி உள்­ளார். அவர் மீது உரிய நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும். ஆம்­பூ­ரில் மறு­வாக்­குப் பதிவு நடத்­த­வேண்­டும்," என்­று பெண்­ வாக்காளர்கள் பல­ரும் காவல்­நி­லை­யத்­தில் புகார் அளிக்க வந்­த­னர்.

ஆம்­பூர் நக­ராட்­சி­யில் திமுக பிர­மு­கர் துரைப்­பாண்­டி­யின் மனைவி மணி­மே­கலை, சுயேச்­சை­யாக தென்னை மரச் சின்­னத்­தில் போட்­டி­யிட்­டார்.

இதை­ய­டுத்து, மணி­மே­க­லை­யின் கண­வர் துரைப்­பாண்டி 18ஆம் தேதி நள்­ளி­ர­வில் வீடுவீடாக 1,500 வீடு­க­ளுக்கு வந்து தங்­கக் காசு­களைக் கொடுத்து தன் மனை­விக்கு வாக்­க­ளிக்­கும்படி மக்­க­ளி­டம் சத்­தி­யம் வாங்­கிக் கொண்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

வாக்­கு­க­ளைப் போட்ட பிறகு தங்­கக்­ கா­சு­களை நகைக்கடை­யில் சோதனை செய்த சிலர், அவை போலி­யா­னவை என்­பதை அறிந்து அதிர்ச்­சி­ய­டைந்­த­னர்.

இந்­நி­லை­யில், சுயேச்சை வேட்­பா­ள­ரும் அவ­ரது கண­வ­ரும் தங்­களது கைபே­சியை அணைத்­து­விட்டு தலை­ம­றை­வாகி உள்­ள­தாகக் கூறப்­ப­டு­கிறது.