இளைஞருக்கு ரஜினி பாராட்டு

இளைஞருக்கு ரஜினி பாராட்டு

1 mins read
6a2c262f-b26d-4060-8d56-8f73930ff8f6
ரஜினி தன்னைச் சந்­தித்துப் பேசும் நாளுக்­காகக் காத்­தி­ருப்­ப­தா­க­வும் அந்த தருணத்தில் அவ­ருக்கு ராக­வேந்­திரா சிலையை அன்பளிப்பாகத் தர­வி­ருப்­ப­தா­க­வும் இளையர் ரஞ்சித் நெகிழ்ச்­சி­யு­டன் கூறியுள்ளார்.படம்: ஊடகம் -

உடு­மலை: திருப்­பூர் மாவட்­டம், உடு­மலை அருகே மண்­பாண்­டக் கலை­ஞ­ரும் ரஜி­னி­யின் தீவிர ரசி­க­ரு­மான ரஞ்­சித் என்ற 21 வயது இளை­ஞர், ரஜி­னி­யின் சிலை­யைக் களி­மண்­ணில் வடித்­துள்­ளார்.

அவ­ரது கைவண்­ணம் டுவிட்­டர், ஃபேஸ்புக் உள்­ளிட்ட சமூக வலைத்­த­ளங்­களில் பர­வி­வ­ரு­வதை அடுத்து, நடி­கர் ரஜினி குரல் பதிவு மூலம் ரஞ்­சித்­துக்கு தனது பாராட்­டு­க­ளைத் தெரி­வித்­துள்­ளார்.

"வணக்­கம் ரஞ்­சித், நீங்­கள் செய்த என்­னோட அரு­மை­யான பொம்­மை­யைப் பார்த்­தேன். என்ன கைக் கலை. நீங்­கள் ரொம்ப ரொம்ப திற­மை­சாலி. உங்­க­ளுக்­காக ஆண்­ட­வ­னி­டம் வேண்டு கிறேன். நிச்­ச­ய­மாக உங்­களை ஒரு நாள் சந்­திக்­கி­றேன் கண்ணா," என குரல் பதி­வில் பேசி பகிர்ந்­துள்­ளார்.