கொலை முயற்சி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

கொலை முயற்சி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

1 mins read
ec70fcc2-a225-4c02-8413-e0e49bccb268
கைதுக்குப் பின்னர் காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப் படும் ஜெயக்குமார். படம்: ஊடகம் -

சென்னை: திமுக தொண்­ட­ரைத் தாக்­கிய வழக்­கில் முன்­னாள் அமைச்­சர் ஜெயக்­கு­மார் காவல்­து­றை­யால் கைது செய்­யப்­பட்­டார். இதை­ய­டுத்து அவரை மார்ச் 7ஆம் தேதி வரை நீதி­மன்­றக் காவ­லில் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லுக்­கான வாக்­குப்­ப­திவு கடந்த 19ஆம் தேதி நடை­பெற்­றது. அப்­போது சென்­னை­யில் உள்ள ராய­பு­ரம் பகு­தி­யில் ஒரு வாக்­குச்­சா­வ­டி­யில் கள்ள வாக்­கு­கள் போடப்­ப­டு­வ­தாக ஜெயக்­கு­மா­ருக்கு தக­வல் கிடைத்­தது.

இதை­ய­டுத்து அவர் அங்கு விரைந்து சென்­ற­போது, திமுக தொண்­டர் நரேஷ் குமார் என்­ப­வ­ரைப் பிடித்து வைத்து அதி­மு­க­வி­னர் விசா­ரணை நடத்­திக்­கொண்­டி­ருந்­த­னர்.

ஜெயக்­கு­மார் சென்­ற­தும் நரேஷ் குமா­ரின் சட்­டை­யைக் கழற்றி அவ­ரது கைக­ளைக் கட்டி காவல்­துறை­யி­டம் ஒப்­ப­டைத்­த­னர். பின்னர் அரசு மருத்­து­வ­ம­னை­யில் உள் நோயா­ளி­யாக அனு­ம­திக்­கப்­பட்ட நரேஷ் குமார் காவல்­து­றை­யில் தாம் தாக்­கப்­பட்­டது குறித்து புகார் அளித்­தார்.

அவர் அளித்த வாக்­கு­மூ­லத்­தின் அடிப்­ப­டை­யில் ஜெயக்­கு­மார் உள்­ளிட்ட 40 பேர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்­டல் உள்­ளிட்ட 15 சட்­டப்­பி­ரி­வு­க­ளின் கீழ் காவல்­து­றை­யி­னர் வழக்­குப்­ப­திவு செய்­த­னர்.

இதை­ய­டுத்து நேற்று முன்­தி­னம் சுமார் 8 மணி­ய­ள­வில் ஜெயக்­கு­மா­ரின் வீட்­டுக்­குச் சென்ற காவல்­துறை­யி­னர், அவ­ரைக் கைது செய்­த­னர். இது குறித்து தக­வல் அறிந்த அதி­மு­க­வி­னர் பலர், அவர் விசா­ரிக்­கப்­பட்ட நுங்­கம்­பாக்­கம் காவல்­நி­லை­யத்­தின் முன் கூடி கண்­டன முழக்­கங்­களை எழுப்­பி­னர்.

இதற்கிடையே, சென்னை நீதிமன்ற நீதிபதி முரளி கிருஷ்ணன் முன்பு முன்னிலைப்படுத்தப்பட்ட ஜெயக்குமாரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு அவர் உத்தரவிட்டார்.