கோவை: எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் கோவை, இலங்கை இடையே விமானச் சேவை தொடங்க உள்ளதாக இலங்கை தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
கோவை அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டில் இலங்கை, சிங்கப்பூர், ஷார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.
எனினும், கொரோனா நெருக்கடி காரணமாக இந்த விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், தொற்று பாதிப்பு குறைந்ததால் விமானங்கள் வழக்கம்போல் இயங்க தொடங்கி உள்ளன.
இதையடுத்து, கோவைக்கு விமானங்கள் இயக்கப்பட இருப்பதாக இலங்கை விமான நிலைய ஆணையத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

