கொங்கு மண்டலத்தைக் கைப்பற்றியது திமுக

கொங்கு மண்டலத்தைக் கைப்பற்றியது திமுக

3 mins read
6adf7eaa-f170-499b-be5c-03f6b60b3d6d
கொங்கு மண்டலத்தில் உள்ள பெரும்பாலான நகர்ப்புற உள்ளாட்சிப் பதவி இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து வால்பாறை பகுதி திமுகவினர் ஆட்டம் பாட்டம் என கொண்டாடி மகிழ்ந்தனர். படம்: ஊடகம் -

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இப்படியொரு தோல்வி உண்டாகும் என அதிமுக தலைமை எதிர்பார்க்கவில்லை என்றும் இந்தத் தோல்வி கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தக் கூடும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

சென்னை: நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லில் அதி­முக படு­தோல்வி கண்­டுள்­ளது. குறிப்­பாக, அதன் கோட்­டை­யா­கக் கரு­தப்­பட்ட கொங்கு மண்­ட­லத்­தை­யும் திமுக வசம் இழந்­துள்­ளது.

இம்­முறை கோவை, சேலம் உள்­ளிட்ட கொங்கு மண்­ட­லப் பகு­தி­க­ளி­லும் திமுக கூட்­ட­ணியே பெரும்­பாலான இடங்­க­ளைக் கைப்­பற்றி உள்­ளது. இத­னால் அதி­முக தலைமை கடும் அதிர்ச்சி அடைந்துள்­ளது.

கொங்கு மண்­ட­லம் என்­பது கோவை, திருப்­பூர், ஈரோடு, சேலம், தர்­ம­புரி, நாமக்­கல், கிருஷ்­ண­கிரி ஆகிய மாவட்­டங்­களை உள்­ள­டக்­கி­ய­தா­கும். கடந்த பல தேர்­தல்­களில் இது அதி­மு­க­வின் கோட்­டை­யா­கவே இருந்து வந்­தது.

கடந்த 2011, 2016 தேர்­தல்­களில் அதி­முக ஆட்­சி­ய­மைக்க கொங்கு மண்­ட­லம் முக்­கிய பங்­க­ளிப்பை அளித்­தது.

தமி­ழ­கத்­தில் உள்ள அனைத்து மாந­க­ராட்­சி­க­ளை­யும் திமுக கைப்­பற்றி­யுள்ள நிலை­யில், சேலம், கோவை மாந­க­ராட்­சி­க­ளி­லும் அடைந்­துள்ள தோல்வி அதி­மு­க­வி­னரை கவ­லை­யில் ஆழ்த்தி உள்­ளது.

கடந்த சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் வெற்­றி­பெற்று ஆட்சி அமைத்த போதி­லும், கொங்கு மண்­ட­லத்­தில் திமு­க­வால் முத்­திரை பதிக்க முடி­ய­வில்லை என்ற வருத்­தம் தமக்கு இருப்­ப­தாக முதல்­வர் மு.க.ஸ்டாலின் வெளிப்­ப­டை­யா­கவே கூறி இருந்­தார்.

அதன் பின்­னர் கொங்கு மண்­ட­லத்­தைச் சேர்ந்த அதி­முக பிர­மு­கர்­கள் சிலர் திமு­க­வில் தங்­களை இணைத்­துக் கொண்­ட­னர். அவர்­க­ளுக்கு உரிய முக்­கி­யத்­து­வம் கொடுத்து கட்­சிப் பணி­யாற்ற வைத்­தார் முதல்­வர் ஸ்டா­லின். அதன் பல­னா­கவே இம்­முறை அந்த மண்­ட­லத்­தை­யும் திமுக தன் வச­மாக்கி உள்­ள­தாக அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள் கரு­து­கின்­ற­னர்.

முன்­னாள் முதல்­வர் எடப்­பாடி பழனி­சா­மி­யின் இல்­லம் அமைந்­துள்ள சேலம் மாந­க­ராட்­சிக்கு உட்­பட்ட 23ஆவது வார்­டி­லும்­கூட திமுக தன் வெற்­றிக்­கொ­டியை நாட்டி­யுள்­ளது.

பழ­னி­சா­மி­யின் எடப்­பாடி சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் எடப்­பாடி நக­ராட்சி, அர­சி­ரா­மணி, பூலாம்­பட்டி பேரூ­ராட்­சி­கள் உள்­ளன. இதில் 15 வார்­டு­கள் கொண்ட அர­சி­ரா­மணி பேரூ­ராட்­சி­யில் அதிக இடங்­களில் திமுக வெற்றி பெற்­றுள்­ளது. எடப்பாடி நக­ராட்சி, பூலாம்­பட்டி பேரூ­ராட்­சி­யி­லும் அதிக இடங்­களில் திமுக வெற்றி கண்­டது.

மாந­க­ராட்சி பகு­தி­யில் சேலம் தெற்கு தொகு­தி­யில் கடந்த சட்டப்பேரவைத் தேர்­த­லில் அதி­மு­க­வும் சேலம் மேற்கு தொகு­தி­யில் அதி­முக கூட்­ட­ணி­யில் இடம் பெற்ற பாம­க­வும் வெற்றி பெற்று இருந்­தன.

இந்­நி­லை­யில், நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லில் இந்­தப் பகு­தி­களில் உள்ள பெரும்­பா­லான வார்­டு­க­ளை­யும் திமுக தன்­வ­ச­மாக்கி உள்­ளது.

கடந்த ஆண்டு நடை­பெற்ற சட்டப்­பே­ர­வைத் தேர்­த­லில் திமுக வெற்­றி­பெற்று ஆட்­சி­ய­மைத்த போதி­லும், கொங்கு மண்­ட­லத்­தில் அக்­கட்­சி­யால் பெரி­தாக ஏதும் சாதிக்க முடி­ய­வில்லை. கோவை­யில் உள்ள பத்து தொகு­தி­க­ளை­யும் அதி­முக கைப்­பற்­றி­யது. சேலம், திருப்­பூர், ஈரோடு, தர்­ம­புரி உள்­ளிட்ட பகு­தி­க­ளி­லும் அதி­முக கணி­ச­மான தொகு­தி­களில் வெற்றி பெற்­றது.

இம்­முறை கொங்கு மண்­ட­லத்­தி­லும் திமுக ஊடு­ருவி முத்­திரை பதித்­துள்­ளது. சட்­டப்­பே­ர­வைத் தேர்­தலை அடுத்து, நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லில் கொங்கு மண்­ட­லத்­தில் திமுக சாதிக்க வேண்­டும் என்­றும் அதற்­காக கடு­மை­யாக உழைக்க வேண்­டும் என்­றும் கட்­சி­யி­ன­ருக்கு முதல்­வர் ஸ்டா­லின் உத்­த­ர­விட்­டி­ருந்­தார். இதை­ய­டுத்து பல்­வேறு வியூ­கங்­களை அமைத்து செயல்­பட்­டது திமுக. அதன் பல­னாக இம்­முறை அக்­கட்­சிக்கு கொங்கு மண்­ட­லத்­தி­லும் பெரிய வெற்றி கிடைத்­துள்­ளது.