ஒரே ஒரு வாக்கு தந்த வெற்றி, சோகம்

ஒரே ஒரு வாக்கு தந்த வெற்றி, சோகம்

1 mins read
a1f93f79-9ff9-4aea-ae74-1f19ed9c6c9c
நித்யா (இடது), நரேந்திரன். படங்கள்: தகவல் ஊடகம் -
multi-img1 of 2

திருச்சி: திருச்சி மாவட்­டத்­திற்­குட்­பட்ட கூத்­தைப்­பார் பேரூ­ராட்­சி­யில் மொத்­தம் 18 வார்­டு­க­ளை­யும் திமுக கூட்­டணி கைப்­பற்றி உள்­ளது.

இங்­குள்ள ஏழா­வது வார்­டில் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் சார்­பில் நித்­யா­வும் நாம் தமி­ழர் கட்சி வேட்­பா­ளர் கர்­ண­னும் போட்­டி­யிட்­ட­னர். இரு­வ­ருக்­கும் இடையே கடும் போட்டி நில­வி­யது.

வாக்கு எண்­ணிக்­கை­யின் முடி­வில் கர்­ணன் 234 வாக்­கு­கள் பெற்ற நிலை­யில், நித்யா 234 வாக்­கு­கள் பெற்­றார். ஒரே­யொரு வாக்கு வித்­தி­யா­சத்­தில் நித்யா வெற்­றி­பெற்­ற­தாக அறி­விக்­கப்­பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சியின் 11ஆவது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நரேந்திரன் 1 வாக்கு மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார்.

இந்தவார்டில் மொத்தம் உள்ள 200 வாக்குகளில் 162 வாக்குகள் மட்டுமே பதிவாகின. இதில் திமுக வேட்பாளர் உமாசங்கர் 84 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக வேட்பாளர் செல்வம் 35 வாக்குகளும் சுயேச்சை வேட்பாளர் நாகமையன் 42 வாக்குகளும் பெற்றனர். நரேந்திரனுக்கு ஒரு வாக்கு மட்டுமே கிடைத்தது.