வாக்குப்பெட்டி அறை: பூட்டுச்சாவி மாயம்

வாக்குப்பெட்டி அறை: பூட்டுச்சாவி மாயம்

1 mins read
8d5416d4-ff92-4b01-b2a5-8432fd7947e4
-

கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 45 வார்டுகளில் பதிவான வாக்குகள் நேற்று காலை அங்குள்ள பள்ளி ஒன்றில் எண்ணப்பட்டன. முன்னதாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்ட அறையின் சாவி தொலைந்து போனதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சாவியைத் தேடும் படலம் நடந்தது. ஒருகட்டத்தில் சாவி கிடைக்காது என்று முடிவு செய்த அதிகாரிகள், அறையின் பூட்டை அறுத்து அதை திறந்தனர். இதனால் எட்டு மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு 8.35 மணிக்குத் தொடங்கியது. படம்: தகவல் ஊடகம்