50ஆவது லட்சம் பயனாளி மருந்துப் பெட்டகம் பெற்றார்

1 mins read
0369a472-eeb7-4360-9d69-d97b21b1bc74
-

சென்னை: தமி­ழக சுகா­தா­ரத் துறை செயல்­ப­டுத்தி வரும் 'மக்­களைத் தேடி மருத்­து­வம்' என்ற திட்­டத்­தின் மூலம் பயன்­பெ­றும் 50ஆவது லட்­சம் பய­னா­ளியை முதல்­வர் மு.க.ஸ்டாலின் வீடு தேடிச்­சென்று நலம் விசா­ரித்­தார்.

அப்­போது அப்­ப­ய­னா­ளிக்கு அவர் மருந்துப் பெட்­ட­கம் ஒன்றை வழங்­கி­னார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 'மக்­க­ளைத் தேடி மருத்­து­வம்' என்ற புதிய திட்­டத்தை முதல்­வர் தொடங்கி வைத்­தார்.

பய­னா­ளி­க­ளின் இல்­லங்­க­ளுக்குத் தேவை­யான முக்­கி­ய­மான மருந்­து­க­ளை­யும் மருத்­து­வச் சேவை­க­ளை­யும் வழங்­கு­வதே இத்­திட்­டத்­தின் நோக்­க­மா­கும்.

இதன் மூலம் 45 வய­தைக் கடந்த உயர் ரத்த அழுத்­தம், நீரி­ழிவு நோயா­ளி­கள் பெரி­தும் பய­ன­டைந்து வரு­கி­றார்­கள். சிறு­நீ­ரக நோயா­ளி­களுக்கு சுய 'டயா­லிஸ்' (ரத்த சுத்­தி­க­ரிப்பு) செய்துகொள்­வ­தற்­குத் தேவை­யான பைகளை வழங்­கு­தல் உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சிய மருத்­துவ சேவை­களும் லட்­சக்­க­ணக்­கானோருக்குப் பய­ன­ளித்து வரு­கிறது.

இந்­நி­லை­யில் இத்­திட்­டத்­தின் கீழ் பய­ன­டைந்­துள்ள ஐம்­ப­தா­வது லட்­சம் பய­னா­ளியை செங்­கல்­பட்டு மாவட்­டத்­தில் நேரில் சந்­தித்து மருந்துப் பெட்­ட­கத்தை வழங்­கி­னார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.