முதல்வர்: புகார்கள் எழாமல் செயல்பட வேண்டும்

முதல்வர்: புகார்கள் எழாமல் செயல்பட வேண்டும்

2 mins read
6cc77399-d580-46e4-854a-fe44f9162fd1
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து திமுகவினர் நேற்று முன் தினம் அண்ணா அறிவாலயத் தில் முதல்வர் ஸ்டாலினை உற்சாகமாக நடனமாடி வரவேற்றனர்.படம்: தமிழக ஊடகம் -

'உள்ளாட்சிப் பிரதிநிதிகளை நான் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருப்பேன்'

சென்னை: நகர்ப்­புற உள்­ளாட்சித் தேர்­த­லில் வெற்­றி­ பெற்­றுள்ள திமுக­வி­னர் மக்­க­ளின் அடிப்­ப­டைப் பிரச்­சி­னை­களை உட­னுக்­கு­டன் தீர்த்து வைக்க வேண்­டும் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் அறிவுறுத்தி உள்­ளார்.

மேலும், புதி­தா­கத் தேர்­வாகி உள்ள உள்­ளாட்­சிப் பிர­தி­நி­தி­கள் தங்­கள் மீது எந்­தப் புகா­ரும் வரா­த­வாறு பார்த்­துக்­கொள்ள வேண்­டும் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

நடந்து முடிந்த நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லில் திமுக அமோக வெற்­றி­பெற்­றுள்­ளது. தமி­ழகத்தில் உள்ள 21 மாந­க­ராட்­சி­க­ளை­யும் திமுக கூட்­டணி கைப்­பற்­றி­யது.

இந்­நி­லை­யில் தேர்­த­லில் வெற்றி­பெற்ற அனை­வ­ருக்­கும் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் வாழ்த்து தெரி­வித்­தார்.

சென்­னை­யில் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், இந்த வெற்­றியை திமு­க­வி­னர் ஆடம்­ப­ர­மாக அல்­லா­மல் அமை­தி­யா­கக் கொண்­டாட வேண்­டும் என்­பதே தமது பனி­வான, உரிமை கலந்த வேண்­டு­கோள் என்­றார்.

"மக்­கள் உங்­கள் மீது வைத்­தி­ருக்­கும் நம்­பிக்­கை­யைக் காப்­பாற்ற வேண்­டும். மக்­க­ளுக்கு நீங்­கள் உண்­மை­யாக இருக்­க­ வேண்­டும், உழைக்­க ­வேண்­டும், பாடு­பட வேண்டும்.

"மக்­கள் முன்­வைக்­கும் அடிப்­படைப் பிரச்­சி­னை­கள் அனைத்­துக்­கும் உட­ன­டி­யாக தீர்வு காண வேண்­டும்," என்­றார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.

திமுக பிர­தி­நி­திக­ளின் செயல்­பா­டுகளைத் தாம் தொடர்ந்து கண்­கா­ணித்­துக்கொண்டே இருக்­கப் போவ­தா­கக் குறிப்­பிட்ட அவர், சரி­யா­கச் செயல்­ப­டாத யாராக இருந்­தா­லும் உரிய நட­வ­டிக்கை எடுக்க தயங்­கப் போவ­தில்லை என்று எச்­ச­ரிக்­கை­யும் விடுத்­தார்.

வாழ்த்து கூறிய வைகோ

இதற்­கி­டையே, தமிழ், தமி­ழர், தமி­ழ­கத்­தின் நல­னுக்­காகப் பாடு­படும் மு.கஸ்­டா­லின் மேற்­கொண்டு வரும் அர­சி­யல் பய­ணத்­திற்கு உள்­ளாட்­சித் தேர்­தல் வெற்றி மேலும் ஊக்­க­மாக அமை­யும் என மதிமுக பொதுச்­செ­ய­லா­ளர் வைகோ கூறி­யுள்­ளார்.

இது தொடர்­பாக வெளி­யிட்ட அறிக்கை ஒன்­றில், தமி­ழ­கத்­திற்­கான உரி­மை­களைப் பாது­காக்க முதல்­வர் ஸ்டா­லின் எடுக்­கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு உள்­ளாட்­சித் தேர்­தல் வெற்றி மூலம் மக்­கள் பேரா­த­ரவு அளித்­துள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"ஆட்­சிப் பொறுப்­பேற்ற 8 மாத காலத்­திற்­குள் தேர்­தல் வாக்­குறு­தி­களில் 80 விழுக்­காட்டை நிறை­வேற்­றிக்காட்டி திமுக அரசு சாதனை படைத்து இருக்­கிறது. தமி­ழ­கத்­திற்­கான உரி­மை­க­ளைப் பாது­காக்­க­வும் மாநில சுயாட்சிக் கோட்­பாடு நிலைபெற­வும் முதல்­வர் ஸ்டா­லின் எடுக்­கும் முயற்­சி­களுக்கு உள்­ளாட்­சித் தேர்­தல் வெற்றி மூலம் தமி­ழக மக்­கள் அளித்­துள்ள பேரா­த­ரவு பறை­சாற்­றப்­பட்டு இருக்­கிறது," என்று வைகோ தெரி­வித்­துள்­ளார்.