வீட்டில் கணவன் உடல்; வாக்களிக்க வந்த ஜனநாயகப் பெண்

வீட்டில் கணவன் உடல்; வாக்களிக்க வந்த ஜனநாயகப் பெண்

1 mins read
214427e6-57fc-4111-bdaf-ab46b1325b10
கணவர் காலையில் இறந்துவிட்டாலும் வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று வனிதா (நடு) விரும்பியதால் அவரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், அழுது கொண்டே இருந்த வனிதாவை சில பெண்கள் ஆட்டோவில் வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்தனர். படம்: தமிழக ஊடகம் -

புவனகிரி: கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் நேற்று மறு வாக்குப்பதிவு நடந்தது.

அங்கு வாக்குரிமை பெற்றிருந்த வனிதா என்ற பெண்மணி அழுதுகொண்டே ஆட்டோவில் வந்து வாக்களித்தார்.

அவருடன் வந்தவர்களை விசாரித்தபோது, அந்தப் பெண்மணியின் கணவரான சங்கர் என்பவர் நேற்றுக் காலை இறந்துவிட்டதாகவும் அவருடைய சடலம் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த நிலையில், ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக வனிதா வாக்களிக்க வந்ததாகவும் தெரியவந்தது.

வனிதாவின் கணவர் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டதாக உறவினர்கள் கூறினர்.