சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது திமுக பிரமுகரை தாக்கியதன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பிணை மனு மீதான விசாரணை இன்று நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஜெயக்குமார் மார்ச் 7ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் ஜெயக்குமாரை நேற்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இதர கட்சிப் பிரமுகர்களும் சந்தித்தனர்.
ஜெயக்குமாருக்கு பிணை வழங்க அரசாங்கம் வேண்டுமென்றே எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அந்தச் சந்திப்புக்கு பிறகு பழனிசாமி கூறினார்.

