தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

22 தமிழக மீனவர்கள் கைது; படகுகளையும் இழந்த பரிதாபம்

1 mins read
90d60825-4e7f-4eb7-be16-cfe78767ce4a
-

ராமேஸ்­வ­ரம்: இலங்கை கடற்­படை, எல்லை தாண்டி மீன்­பி­டித்­த­தா­கக் கூறி 22 தமி­ழக மீன­வர்­களைக் கைது­செய்­து­விட்­டது.

கச்­சத்­தீவு அருகே மீன் பிடித்துக்­கொண்டு இருந்த அந்த மீன­வர்­கள், தமிழ்­நாடு நாகப்­பட்டி­னத்­தைச் சேர்ந்­த­வர்­கள் என்று கூறப்­படு­கிறது. அவர்­களில் ஒன்­பது பேர் நள்ளி­ர­வில் கைதா­ன­தாக தக­வல்­கள் தெரி­வித்­தன.

விசைப்­ப­டகு ஒன்­றை­யும் இலங்கை கடற்­படை கைப்­பற்­றி­ய­தாக முதல்­கட்ட தக­வல்­கள் கூறின. இந்­நி­லை­யில், கச்­சத்­தீவு அருகே இதர பட­கு­களில் மீன் பிடித்­துக்­கொண்டு இருந்த மேலும் 13 தமி­ழக மீன­வர்­களை நேற்­றுக் காலை இலங்கை கடற்­படை கைது செய்­த­தாகவும் அவர்களின் படகுகளை பறிமுதல் செய்ததாகவும் ஊட­கத் தக­வல்­கள் தெரி­வித்­தன.

அந்த 22 பேரையும் மார்ச் 10 ஆம் தேதிவரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

தன்­னு­டைய எல்­லைக்­குள் நுழைந்து தமி­ழக மீன­வர்­கள் மீன் பிடிக்­கி­றார்­கள் என்று கூறி அவர்­களை இலங்கை கடற்­படை கைது­செய்­யும் சம்­ப­வங்­கள் தொடர்­கதை­யாக நிகழ்ந்து வரு­கின்­றன.

இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகண்டு உதவும்படி இந்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.