ராமஜெயம் கொலை: புதிய கோணத்தில் முழுவீச்சில் விசாரணை

ராமஜெயம் கொலை: புதிய கோணத்தில் முழுவீச்சில் விசாரணை

2 mins read
2ef36ae6-9589-4f27-a670-270a76046919
கொலை செய்யப் பட்டு, பொன்­னி­டெல்டா பகுதி காவிரி ஆற்றுக் கரை ஓரம் வீசப்பட்ட ராம ஜெயம் உடல். கோப்புப் படம் -

திருச்சி: திருச்­சியைச் சேர்ந்த திமுக அமைச்­சர் கே என் நேரு­வின் தம்­பி­யான தொழில்­துறை பெரும்புள்ளி ராம­ஜெ­யம், 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி அதி­கா­லை­யில் கொடூர­மான முறை­யில் கொலை செய்­யப்­பட்­டார்.

அவ­ரின் உடல், திருச்சி கல்லணை ரோட்­டில் பொன்­னி­டெல்டா பகுதி காவிரி ஆற்றுக் கரை­யோ­ரம் தூக்கி வீசப்­பட்டு கிடந்­தது. கொலை நடந்து 10 ஆண்­டு­கள் ஆன நிலை­யில் ராம­ஜெ­யம் கொலை பற்­றிய புலன்­வி­சா­ரணை புது கோணத் தில் முழு­வீச்­சில் தொடங்­கும் என்று இப்­போது அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தமி­ழக அள­வில் பெரும் பரபரப்பை ஏற்­ப­டுத்­திய இந்தக் கொலை சம்­ப­வம் குறித்து முதலில் ஸ்ரீரங்­கம் காவல்­துறை வழக்­குப்­ப­திவு செய்து 12 தனிப்­படை­கள் அமைத்து விசா­ரணை தொடங்­கி­யது.

எந்த முன்­னேற்­ற­மும் இல்­லா­ததை அடுத்து வழக்கு நான்கு மாதங்­கள் கழித்து சிபி­சி­ஐடி அதி­கா­ரி­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

கிட்­டத்­தட்ட ஐந்து ஆண்­டு­கள் ஆன போதி­லும் சிபி­சி­ஐடி விசாரணை­யில் ஒன்­றும் வெளி­வ­ர­வில்லை. இந்­நி­லை­யில், வழக்கை சிபிஐ விசா­ர­ணைக்கு மாற்ற வேண்­டும் என்று ராம­ஜெ­யத்­தின் மனைவி லதா வழக்கு தாக்­கல் செய்­தார்.

ஆனால் பல தடங்­கல்களுக்­குப் பிறகு கடை­சி­யாக 2017ஆம் ஆண்டு நவம்­ப­ரில் வழக்கு சிபிஐ வச­மா­னது. சிபிஐ விசா­ரித்து வந்­தது. அதற்­குள் நான்கு ஆண்­டு­கள் ஓடி­ய­து­தான் மிச்­சம். அதை­யடுத்து வழக்கு விசா­ர­ணையை மறு­ப­டி­யும் தமி­ழக அர­சி­டம் ஒப்­படைக்க வேண்­டும் என்று ராம­ஜெ­யத்­தின் சகோ­த­ரர் ரவிச்­சந்­திரன் நீதி­மன்­றத்­தில் முறை­யிட்­டார்.

இதற்­குத் தமி­ழக காவல் துறை தயார் என்று அறி­விக்க, கொலை விசா­ரணை மறு­ப­டி­யும் தமி­ழக காவல் துறை­யி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. 10 ஆண்­டு­க­ளுக்குப் பிறகு நீதி­மன்றக் கண்­கா­ணிப்­பில் சிறப்பு புல­னாய்­வுக்­குழு அமைக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், ராம­ஜெ­யம் கொலை விசா­ரணை பற்றி கருத்து தெரி­வித்த தமி­ழக காவல்­துறை மூத்த அதி­காரி ஒரு­வர், அடுத்த ஓரிரு நாள்­களில் டிஜிபி தலை­மை­யில் ஆலோ­சனைக் கூட்­டம் நடக்­கும் என்­றும் இது­வரை நடத்­தப்­பட்ட விசா­ரணை அறிக்­கை­களை ஆய்வு செய்து புதிய கோணத்­தில் விசாரணை முழு­மூச்­சில் தொடங்­கும் என்­றும் தெரி­வித்­தார்.