பிறந்தநாளில் மரியாதை: அரசுக்குப் பாராட்டு

பிறந்தநாளில் மரியாதை: அரசுக்குப் பாராட்டு

1 mins read
3169e73f-d180-43d7-8312-37a7540404cf
மலர்தூவி மரியாதை செலுத்தும் அதிகாரிகள். படம்: ஊடகம் -

சென்னை: காலஞ்­சென்ற முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் 74வது பிறந்­த­நாளை முன்­னிட்டு அவ­ரது சிலைக்கு தமி­ழக அரசு சார்­பில் மரி­யாதை செலுத்­தப்­பட்­டது. மன­மாச்­ச­ரி­யங்­க­ளைக் கடந்து மறைந்த தலை­வ­ரின் பிறந்­த­நாளை கொண்­டாடி, மரி­யாதை செலுத்­தி­ய­தற்­காக தமி­ழக அர­சைப் பல்­வேறு தரப்­பி­ன­ரும் பாராட்டி உள்­ள­னர்.

இந்த அர­சி­யல் நாக­ரி­கம் தொடர வேண்­டும் என்­றும் தெரி­வித்­துள்­ள­னர்.

நேற்று முன்­தி­னம் சென்னை காம­ரா­ஜர் சாலை­யில் உள்ள ஜெ.ஜெய­ல­லிதா வளா­கத்­தில் அமைக்­கப்­பட்­டுள்ள அவ­ரது திரு­வு­ரு­வச் சிலைக்கு கீழே அவ­ரது படம் அலங்­க­ரித்து வைக்­கப்­பட்­டி­ருந்­தது. அந்­தப் படத்­துக்கு அரசு சார்­பில் செய்­தித்­துறை செய­லா­ளர், இயக்­கு­நர் ஆகி­யோர் மலர்­தூவி மரி­யாதை செலுத்­தி­னர்.

அதி­முக ஆட்­சிக்­கா­லத்­தில்­தான் திமுக தலை­வ­ரும் முன்­னாள் முதல்­வ­ரு­மான கரு­ணா­நிதி கால­மா­னார். 2018ம் ஆண்டு அவர் மறைந்­த­போது தமி­ழக சட்­டப்­பே­ர­வை­யில் இரங்­கல் தெரி­விக்­கப்­பட்­டது. எனி­னும் அவ­ரது பிறந்­த­நாளை அரசு விழா­வாக கொண்­டா­டு­வது குறித்து அறி­விப்பு ஏதும் வெளி­யா­க­வில்லை.

ஆனால் ஜெய­ல­லி­தா­வின் பிறந்­த­நாளை நடப்பு திமுக அரசு கொண்­டாடி உள்­ளது. அவ­ருக்கு மரி­யா­தை­யும் செலுத்­தப்­பட்­டுள்­ளது என்று குறிப்பிட்டு சமூக வலைத் தளங்களில் அரசுக்குப் பாராட்டு தெரிவித்து ஏராளமானோர் பதிவிட்டுள்ளனர்.