தாதுமணல் மோசடி: தனியார் நிறுவனங்களிடம் இருந்து ரூ.5,832 கோடி வசூலிக்க உத்தரவு

2 mins read
200337ed-e7c2-42b5-8fe1-bb179b7bd42b
-

சென்னை: கடந்த பத்து ஆண்டு­க­ளுக்­கும் மேலாக நடந்­துள்ள சட்­ட­வி­ரோத கடற்­கரை தாது மணல் ஏற்­று­மதி குறித்து விசா­ரிக்க சிறப்பு புல­னாய்­வுக் குழுவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்­துள்­ளது.

இத்­த­க­வலை சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் அரசு தெரி­வித்­தது.

கடற்­கரை தாது­ம­ணல் ஏற்­று­ம­தி­யில் பெரும் முறை­கே­டு­கள் நடந்­தி­ருப்­ப­தாக உயர் நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்ள பொது­நல மனு மீதான விசா­ரணை தற்போது நடை­பெற்று வரு­கிறது.

இந்­நி­லை­யில், தாது மணல் ஏற்று­ம­தி­யில் ஈடு­பட்­டுள்ள தனி­யார் நிறு­வ­னங்­க­ளால் ரூ.5,832 கோடி அள­வுக்கு அர­சுக்கு இழப்பு ஏற்பட்­டுள்­ளது என்­றும் சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து இந்­தத் தொகையை வசூ­லிக்க மாவட்ட ஆட்­சி­யர்­க­ளுக்கு உத்­த­ரவு பிறப்­பிக்கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அரசு நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­துள்­ளது.

திரு­நெல்­வேலி, தூத்­துக்­குடி, கன்­னி­யா­கு­மரி ஆகிய மூன்று மாவட்­டங்­க­ளின் ஆட்­சி­யர்­கள் இந்த உத்­த­ர­வைச் செயல்­ப­டுத்த உள்­ள­னர். சட்ட விரோத மணல் ஏற்­று­மதி­யில் ஈடு­பட்ட நிறு­வ­னங்­கள் மீது சம்­பந்­தப்­பட்ட சிறப்பு நீதி­மன்­றங்­களில் புகார் அளிக்­கு­மாறு அந்­தந்த மாவட்ட ஆட்­சி­யர்­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­படும் என்று தொழில்­துறை செய­லா­ளர் தெரி­வித்­துள்­ளார்.

கடற்­கரை தாது மணல் எடுக்­கும் உரி­மங்­களை மூன்று மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­கி­ய­தா­க­வும் பெரிய அளவி­லான சட்­ட­வி­ரோத மணல் கொள்ளை பற்­றிய புகார்­க­ளைத் தொடர்ந்து, கடந்த 2013ம் ஆண்டு தாது மணல் எடுக்­க­வும் கொண்டு செல்­ல­வும் தடை­வி­திக்­கப்­பட்­ட­தாக வும் தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.

இதை­ய­டுத்து கடற்­கரை மணல் கொள்ளை தொடர்­பான குற்­றச்­சாட்­டு­களை விசா­ரிக்க ஐஏ­எஸ் அதி­காரி ககன்­தீப் சிங் பேடி தலை­மை­யில் சிறப்­புக் குழு அமைக்­கப்­பட்­டது என்­றும் அதன் மூலம் மூன்று மாவட்­டங்­களில் 234.55 ஹெக்­டேர் பரப்­ப­ள­வில் 1.01 கோடி டன் மணல் சட்ட விரோ­த­மாக அள்­ளப்­பட்­ட­தா­க­வும் தெரி­ய­வந்­துள்­ளது என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

மணல் அள்ள தடை விதிப்பதற்கு முந்தைய காலத்தில் (2000 முதல் 2013 வரை) தனியார் நிறுவனங்களால் தமிழக அரசுக்கு ரூ.3,829.76 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தடைக்குப் பிந்திய காலத்தில் (2013 முதல் 2016 வரை) ரூ.2,002.67 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.