சென்னை: ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்துக்கொண்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக மகேஷ் என்பவர் புகார் அளித்துள்ளார்.
ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன் ஆகியோர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலை மிரட்டல் விடுத்தது, அத்துமீறி நுழைதல் உட்பட ஆறு பிரிவுகளின் மீது புதிய வழக்கை எதிர்கொண்டுள்ளார் ஜெயக்குமார்.
திமுக பிரமுகரைத் தாக்கிய வழக்கில் அவருக்குப் பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. மறியல் செய்த வழக்கில் பிணை பெற்றுள்ளார்.
இந்நிலையில், மூன்றாவது வழக்கில் அவர் மீண்டும் கைதாகி உள்ளார்.

