விவசாய நிலத்தில் மதுக்கடை திறக்க அனுமதி இல்லை: நீதிமன்றம் அதிரடி

விவசாய நிலத்தில் மதுக்கடை திறக்க அனுமதி இல்லை: நீதிமன்றம் அதிரடி

1 mins read
7f2f5026-2b9a-4466-9035-63ffbb3667d0
-

சென்னை: விவ­சாய நிலத்­தில் மதுக்­க­டை­களை திறக்­கக்­கூ­டாது என சென்னை உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

இது தொடர்­பான வழக்கை விசா­ரித்த இரு நீதி­ப­தி­க­ளைக் கொண்ட உயர் நீதி­மன்ற அமர்வு, விவ­சாய நிலங்­களில் மதுக்­கடை அமைக்க தமி­ழக அரசு அனு­மதி வழங்­கக்­கூ­டாது என்­றும் அரசு இதை உறுதி செய்ய வேண்­டும் என்­றும் உத்­த­ர­விட்­ட­னர்.

திரு­வள்­ளூர் மாவட்­டம், கும்­மி­டிப்­பூண்டி பகு­தி­யில் உள்ள யாழினி நக­ரில் டாஸ்­மாக் மது­பா­னக் கடை திறப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­கள் அண்­மை­யில் தொடங்­கின. இதற்கு அப்­ப­குதி மக்­கள் மத்­தி­யில் கடும் எதிர்ப்பு கிளம்­பி­யது.

யாழினி நக­ரில் ஏரா­ள­மான விளை நிலங்­கள் உள்­ளன. அங்கு மதுக்­கடை திறக்­கப்­பட்­டால் விவ­சா­யப் பணி­கள் பாதிக்­கப்­படும் என பொதும்­க­கள் தெரி­வித்­த­னர்.

இதை­ய­டுத்து அப்­ப­கு­தியை சேர்ந்த அருண் என்­ப­வர் சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடுத்­தார். பொது­மக்­க­ளின் கோரிக்­கையை ஏற்று, விவ­சா­யப் பகு­தி­யில் மதுக்­கடை திறப்­ப­தற்­குத் தடை­வி­திக்க வேண்­டும் என அவர் தமது மனு­வில் வலி­யு­றுத்தி இருந்­தார்.

இதை­ய­டுத்து அர­சுத் தரப்­பில் தாக்­கல் செய்­யப்­பட்ட மனு­வில், குறிப்­பிட்ட விவ­சாய நிலப்­ப­கு­தி­யில் மதுக்­கடை திறக்­கப்­பட மாட்­டாது என்­றும் சட்ட விதி­க­ளின்­படி உரிய இடத்­தில் மது­பா­னக்­கடை அமைக்க அனு­மதி வழங்­கப்­படும் என்றும் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. இதை ஏற்­றுக்­கொண்ட இரு நீதி­ப­தி­கள் கொண்ட அமர்வு, விவ­சாய பகு­தி­யில் மதுக்­க­டை­களை திறக்­கக் கூடாது என உத்தரவிட்டது.