தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
படம்: ஊடகம்

