நடத்துநர்மீது 'கேக்' தடவிய மாணவர்கள்

நடத்துநர்மீது 'கேக்' தடவிய மாணவர்கள்

1 mins read
f62f5d52-5cae-4963-af8d-2963a2c0ca0d
-

சென்னை: பேருந்து தினக் கொண்­டாட்­டத்­தின்­போது நடத்­து­நர் முகத்­தில் கேக்கை தடவிய 30 மாண­வர்­கள்மீது வழக்­கு பதி­வா­னது.

நேற்று முன்­தி­னம் பெரம்­பூர் பகு­தி­யில் சென்று கொண்­டி­ருந்த மாந­க­ரப் பேருந்தை நிறுத்தி, அதில் ஏறிய பள்ளி மாண­வர்­கள் பேருந்து தினத்­தைக் கொண்­டா­டு­வ­தாக பய­ணி­க­ளி­டம் தெரி­வித்­துள்­ள­னர்.

பின்­னர் பேருந்து மீது பால் ஊற்றிய மாண­வர்­கள், பின்­னர் தங்­க­ளி­டம் இருந்த கேக்கை வெட்டி பேருந்து ஓட்­டு­ந­ரின் முகத்­தில் தடவி உள்­ள­னர்.

இது குறித்து நடத்­து­நர் அளித்த புகா­ரில் 30 மாண­வர்­கள் மீது வழக்­குப் பதிவு செய்­யப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் 11ஆம் வகுப்பு மாண­வர் ஒரு­வ­ரும் கல்லூரி மாண­வர் ஒரு­வ­ரும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

சென்­னை­யில் பேருந்து தினக் கொண்­டாட்­டம் என்று கூறி பள்ளி, கல்­லூரி மாண­வர்­கள் இத்­த­கைய செயல்­களில் ஈடு­ப­டு­வது அதி­க­ரித்து வரு­வ­தா­க­வும் இனி இது தொடர்­பில் கடும் நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும் என்­றும் காவல்­துறை கூறி­யுள்­ளது.