'உங்களில் ஒருவன்' வெளியீடு

'உங்களில் ஒருவன்' வெளியீடு

2 mins read
13285a86-5657-488b-8243-55ed68394d4c
முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள நூலை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார். படம்: இந்திய ஊடகம் -

சென்னை: தமி­ழக முதல்­வர் மு.க. ஸ்டா­லி­னின் சுய­ச­ரிதையான 'உங்­க­ளில் ஒரு­வன்' நூல் நேற்று வெளி­யீடு கண்­டது.

இதற்­காக சென்னை நந்­தம்­பாக்­கம் வர்த்­தக மைய கூட்­ட­ரங்­கில் பிரம்­மாண்ட கூட்­டம் ஏற்­பாடு செய்யப்பட்­டது.

மு.க.ஸ்டா­லின் தனது பள்ளி-கல்­லூரிப் படிப்புக் காலம், இளமை காலம், அர­சி­யல் ஆர்­வம், முதல் அர­சி­யல் கூட்­டம், முதல் பொதுக்­கூட்ட பேச்சு, திரை­யு­ல­கில் கால் தடம் பதித்­தது, திரு­மண வாழ்க்கை, மிசா காலத்­தின் தொடக்­கம் என 1976ஆம் ஆண்டு வரை­யி­லான 23 ஆண்டுகால வாழ்க்கைப் பய­ணத்தை 'உங்­களில் ஒரு­வன்' என்ற தலைப்­பில் சுய­ச­ரிதையாக எழு­தி­உள்­ளார். இந்­தப் புத்­த­கத்­தின் முதல் பாகம் வெளி­யீட்டு விழா நேற்று நடை­பெற்­றது.

விழா­வுக்கு திமுக பொதுச் ­செ­ய­லா­ள­ரும், நீர்­வ­ளத்­துறை அமைச்­ச­ரு­மான துரை­மு­ரு­கன் தலைமை தாங்­கி­னார்.

திமுக பொரு­ளா­ளர் டி.ஆர்.பாலு எம்.பி. முன்­னிலை வகித்­தார். திமுக மக­ளிர் அணி செய­லா­ளர் கனி­மொழி எம்.பி. வர­வேற்று பேசி­னார். 'உங்­களில் ஒரு­வன்' (பாகம்-1) நூலை அகில இந்­திய காங்­கி­ரஸ் கட்­சி­யின் முன்­னாள் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ராகுல்­காந்தி வெளி­யிட்­டார்.

இவ்விழாவில் கேரள முதல்வர் பினராய் விஜயன், ஒமர் அப்துல்லா உட்பட பல மாநில முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நூல் வெளி­யீட்டு விழா­வுக்கு முன்பு பேசிய முதல்­வர் மு.க. ஸ்டா­லின், ஆறு பந்­து­க­ளி­லும் சிக்­ஸர் அடித்­த­து­போன்ற வெற்­றியை திமுக தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி பெற்று உள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார்.

"2019 நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் வெற்றி, அத­னு­டன் இணைந்து நடந்த சட்­ட­மன்ற இடைத்­தேர்­த­லில் அதிக இடங்­களில் வெற்றி, 2020ல் ஊரக உள்­ளாட்சித் தேர்­த­லில் வெற்றி, 2021ல் சட்­ட­மன்ற தேர்­த­லில் திமுக ஆட்­சியை உரு­வாக்­கிய வெற்றி, ஒன்­பது மாவட்ட ஊரக உள்­ளாட்சித் தேர்­த­லில் வெற்றி, 2022ல் நகர்ப்­புற உள்­ளாட்சித் தேர்த லில் வெற்றி என ஆறு தேர்­தல் களங்­களில் அடுத்­த­டுத்து வெற்றி, வெற்­றிக்கு மேல் வெற்றி பெற்று இருக்­கிறது திமுக தலை­மை­யி­லான மத­ச்சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி.

"கிரிக்­கெட் விளை­யாட்­டில் ஒரு ஓவ­ரில் ஆறு பந்­து­க­ளி­லும் 'சிக்­சர்' அடிப்­பது போன்ற வெற்றி இது. மக்­கள் தந்த வெற்றி. இந்த வெற்­றி­யின் அருமை பெருமை முழு­தும் மக்­க­ளையே சேரும். அனை­வ­ருக்­கும் நன்றி, நன்றி," என்று ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

திரு ராகுல் காந்தி நூல் வெளி­யீட்­டுக்­குப் பிறகு மாலை 6.30 மணி­ய­ள­வில் சத்­தி­ய­மூர்த்தி பவ­னில் காங்­கி­ரஸ் நிர்­வா­கி­க­ளைச் சந்­தித்­துப் பேசி­னார்.