தந்தையைக் கொன்றவர் காவல்துறையில் சரண்

தந்தையைக் கொன்றவர் காவல்துறையில் சரண்

1 mins read
fa5a40c5-38a1-4181-8078-b3a3178470e9
-

பழநி: பழநி-திண்­டுக்­கல் மாவட்­டத்­தில் தாயை அடித்த தந்­தையை மகன் கிரிக்­கெட் மட்­டை­யால் தாக்­கி­ய­தால் அவர் மர­ண­ம­டைந்­தார்.

பழநி அருகே சத்­தி­ரப்­பட்டி முல்லை நகர் பகு­தி­யைச் சேர்ந்த ஓமந்­தூ­ரான், 45, கேரள மாநி­லத்­தில் வட்­டிக்கு பணம் கொடுக்­கும் தொழி­லில் ஈடு­பட்­டுள்­ளார்.

இதற்­காக அவர் கேர­ளா­வுக்கு சென்­று­விட்டு வாரத்­தில் ஒரு முறை சொந்த ஊருக்­குத் திரும்­பு­வார்.

அவ­ரது மனைவி பாண்­டீஸ்­வ­ரிக்கு திண்­டுக்­கல்­லில் சொந்­த­மாக வீடு ஒன்று உள்­ளது. அந்த வீட்டை விற்று பணம் தரும்­படி ஓமந்­தூ­ரான் தனது மனை­வி­யி­டம் தொந்­த­ரவு செய்து வந்­தார்.

ஆனால் அதற்கு பாண்­டீஸ்­வரி சம்­ம­திக்­கா­த­தால் அவர்­க­ளுக்கு இடையே அடிக்­கடி தக­ராறு ஏற்­பட்­டது. இந்த நிலை­யில் ஊர் திரும்­பிய ஓமந்­தூ­ரான் ஞாயிறு இரவு குடி­போ­தை­யில் மனை­வியை அடித்து உள்­ளார்.

அப்­போது 11ஆம் வகுப்பு படிக்­கும் 17 வயது மக­னும் 9ஆம் வகுப்பு படிக்­கும் மகளும் அவரை தடுத்­துள்­ள­னர். மக­ளை­யும் அவர் தாக்­கி­னார்.

இத­னால் ஆத்­தி­ர­ம­டைந்த அவ­ரது மகன் கிரிக்­கெட் மட்டையால் தாக்­கி­ய­தால் ஓமந்­துா­ரான் இறந்­தார். இதை­ய­டுத்து மகன் சத்­தி­ரப்­பட்டி காவல்­நி­லை­யத்­தில் சரண் அடைந்­தார். மகனின் பெயரை ஊடகங்கள் வெளியிடவில்லை.

இது­கு­றித்து வழக்­குப்­ப­திவு செய்த காவல் துறை­யி­னர் மாண­வரை கைது செய்­த­னர்.

பின்­னர் அவரை திண்­டுக்­கல் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்தி மது­ரை­யில் உள்ள சிறு­வர் சீர்­தி­ருந்த பள்­ளி­யில் அடைத்­த­னர்.