உலகின் உயரமான முருகன் கோவிலுக்கு ஏப்ரல் 6ல் குடமுழுக்கு

உலகின் உயரமான முருகன் கோவிலுக்கு ஏப்ரல் 6ல் குடமுழுக்கு

2 mins read
11211413-6e75-4802-b6bb-acae3c2c97ba
முத்துமலை முருகன் திருப்பணி ஏறக்குறைய நிறைவடைந்து உள்ளது. படம்: இந்திய ஊடகம் -

சேலம்: சேலம் மாவட்­டம் புத்­தி­ர­க­வுண்­டன்­பா­ளை­யத்­தில் கட்­டப்­பட்டு வரும் உல­கின் உய­ர­மான முரு­கன் சிலைக்கு ஏப்­ரல் 6ஆம் தேதி கும்­பா­பி­ஷே­கம் செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் நடைெபற்று வரு­கின்­றன.

முரு­கனை வானில் பறந்­து­கொண்டே தரி­ச­னம் செய்­ய­வும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

சேலம் புத்­தி­ர­க­வுண்­டன் பாளை­யத்­தில் 146 அடி உயர முரு­கன் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

முத்­து­மலை அடி­வா­ரத்­தில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்­சா­லை­யை­யொட்­டிய பாதை­யில் மிக உய­ர­மான முரு­கன் சிலையை தமி­ழ­கத்­தைச் சேர்ந்த திரு­வா­ரூர் தியா­க­ரா­ஜன் ஸ்த­பதி குழு­வி­னர் வடி­வ­மைத்­துள்­ள­னர்.

மலே­சி­யா­வின் பத்­து­ம­லை­யில் உள்ள முரு­கன் சிலை­யின் உய­ரம் 140 அடி. அந்த முரு­க­னை­விட ஆறு அடி உய­ர­மாக 146 அடி உய­ரத்­தில் முரு­கன் உரு­வச்­சி­லை மிக நேர்த்­தி­யாக வடி­வ­மைக்­கப்­பட்டு உள்­ளது.

இந்த முரு­க­னு­டன் கூடிய கோவில் கும்­பா­பி­ஷே­கம் ஏப்­ரல் மாதம் 6ஆம் தேதி நடை­பெ­று­கிறது.

தற்­போது சிலை­யின் திரு­மேனி கட்­ட­மைப்பு பணி­கள் முடி­வ­டைந்த நிலை­யில் மேல்­பூச்சு மற்­றும் ஆடை, ஆப­ர­ணங்­கள் அமைக்­கும் நுண்­ணிய கலை வேலைப்­பா­டு­கள் செய்­யப்­பட்டு வரு­கின்­றன.

முரு­கன் உரு­வச்­சி­லைக்கு வண்­ணம் தீட்­டும் பணி­களும் நிறை­வ­டைந்­துள்­ளது.

மேலும் முரு­கன் உரு­வச்­சி­லையை பக்­தர்­கள் முழு­மை­யாக கண்டு ரசிப்­ப­தற்கு வச­தி­யாக 146 அடி உய­ரத்­திற்­கும் நவீன 'லிப்ட்' அமைக்­கும் பணி­களும் தங்­கும் விடுதி வச­தி­களும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.

முத்­து­மலை முரு­கன் சிலை மூன்று ஆண்­டு­க­ளாக திருப்­பணி நடை­பெற்று வந்­தது.

இந்த உய­ர­மான முரு­கனை அரு­கில் தரி­ச­னம் செய்ய ஹெலி­காப்­டர் வசதி செய்­யப்­பட்­டுள்­ளது. இத­னால் வானில் பறந்­து­கொண்டே முரு­கனை தரி­ச­னம் செய்­ய­லாம் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.