தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'ஆண்டுதோறும் ஒரு மில்லியன் இளையர்களை மேம்படுத்துவோம்'

2 mins read
379a6cfc-04e4-410d-936f-63af6e03de29
மு.க.ஸ்டாலின். படம்: ஊடகம் -

மு.க.ஸ்டாலின்: 'நான் முதல்வன்' திட்டம் வேலை தேடுவோரைத் தகுதிப்படுத்தும்

சென்னை: தமி­ழ­கத்­தில் வேலை தேடு­ப­வர்­களை தகு­திப்­ப­டுத்­தும் மையங்­களை அரசே நிறு­வும் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

இளை­யர்­க­ளுக்கு வழி­காட்­டும் வகை­யில் 'நான் முதல்­வன்' திட்டத்தை நேற்று முன்­தி­னம் அவர் தொடங்கி வைத்­தார்.

இந்­நி­கழ்­வில் பேசிய அவர், ஆண்­டு­தோ­றும் பத்து லட்­சம் (ஒரு மில்லியன்) இளை­யர்­க­ளைப் படிப்­பில், அறிவில், சிந்­த­னை­யில், ஆற்­ற­லில், திறமை­யில் மேம்­ப­டுத்தி நாட்­டுக்கு வழங்­கு­வதே 'நான் முதல்­வன்' திட்டத்­தின் முக்­கிய நோக்­கம் என்­றார் அவர்.

அரசு பள்­ளி­கள், அரசு உதவி பெறும் பள்ளி, கல்­லூரி, பல்­கலைக்­கழக மாணவ, மாண­வி­ய­ரின் தனித் திற­மை­களை அடை­யா­ளம் கண்டு அவற்றை மேலும் ஊக்­கு­விப்­ப­து­தான் இந்­தத் திட்­டத்­தின் சிறப்­பம்­சம் என்­றும் முதல்­வர் ஸ்டாலின் குறிப்­பிட்­டார்.

பள்ளி, கல்­லூரி மாண­வர்­கள், இளை­ஞர்­க­ளுக்­கான திறன் மேம்­பாட்­டுத் திட்­ட­மான 'நான் முதல்வன்' கல்­வி­யில் மட்­டு­மல்­லாது, வாழ்க்­கை­யி­லும் இளை­யர்­களை வெற்­றி­யா­ள­ராக்­கும் வகை­யில் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது என்றார் முதல்­வர் ஸ்டா­லின்.

என்ன படிக்­க­லாம், எங்கு படிக்­க­லாம் என்­று பள்ளிகள் இனி வழி­காட்டும் என்றும் என்ன வேலைக்கு இளை­யர்­கள் தங்­களை தகு­திப்­ப­டுத்­திக் கொள்ள­லாம் என்பதை எடுத்துச் சொல்லும் மையங்­க­ளாக கல்­லூ­ரி­கள் மாறும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

திட்­டத்தை தொடங்கி வைத்­துப் பேசிய முதல்­வர் மு.க.ஸ்டா­லின், இது தமது கன­வுத்­திட்­டம் என்­றார்.

"அனைத்து இளை­ஞர்­களையும் கல்­வி­யில், ஆராய்ச்­சி­யில், சிந்தனை­யில், செய­லில், திற­மை­யில் சிறந்­த­வர்­க­ளாக மாற்­றிட வேண்­டும் எனும் உணர்­வோடு இந்­தத் திட்­டம் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கிறது.

"தமிழ்­நாட்­டில் எல்­லோ­ரும் பள்­ளிக்­கல்­வியை முடித்­து­வி­டு­கிறார்­கள். கல்­லூ­ரிப் பட்­டங்­க­ளை­யும் பெற்­று­வி­டு­கி­றார்­கள். ஆனால் அவர்­கள் எல்­லோ­ருக்­குமே வேலை கிடைத்­தி­ருக்­கி­றதா என்று கேட்டால் அது ஒரு கேள்­விக்குறி­யா­கத்தான் இருக்­கிறது.

"போது­மான வேலை வாய்ப்­பு­கள் உள்­ளன. ஆனால் அதற்­குத் தகு­தி­யான இளை­யர்­கள் இல்லை என்று கூறு­கி­றார்­கள். இதைக் கேட்­கும்­போது மிக வருத்­த­மா­கத்தான் இருக்­கிறது. பட்­டம் வாங்­கி­ இருக்­கி­றார்­கள். ஆனால், அந்­தப் படிப்பு குறித்த தெளிந்த அறிவு எல்­லோ­ருக்­கும் இல்லை என்று சொல்­லப்­ப­டு­கிறது," என்­றார் முதல்வர் ஸ்டா­லின்.

"எதிர்­வ­ரும் 2030ஆம் ஆண்­டுக்­குள் தமி­ழ­கத்­தில் ஒரு டிரில்­லி­யன் டாலர் பொரு­ளா­தா­ரத்தை வளர்க்க வேண்­டும் என்று சொல்லி வரு­கிறேன்.

"இப்­ப­டிப் பொரு­ளா­தா­ரம் வளர வேண்­டும் என்­றால், 2026ஆம் ஆண்டுக்­குள் தமிழ்­நாட்­டில் இரண்டு மில்­லி­யன் இளை­ஞர்­களின் திறன் மேம்­பாடு அடைய வேண்­டும். இதற்­காக மாண­வர்­களுக்­குப் பயிற்சி தரப் போகி­றோம். அதற்குமுன், பயிற்சி தரக்­கூ­டிய ஆசி­ரி­யர்­க­ளுக்கு முத­லில் பயிற்சி தரப் போகி­றோம்," என்­றார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.