ஐந்து நாள் அடைபட்டுக் கிடந்தோம்: உக்ரேன் அனுபவத்தை விவரித்த கோவை மாணவி

ஐந்து நாள் அடைபட்டுக் கிடந்தோம்: உக்ரேன் அனுபவத்தை விவரித்த கோவை மாணவி

2 mins read
d6171608-af80-449b-99bc-2f6462e24522
தமது தாயாருடன் பார்கவி. படம்: தமிழக ஊடகம் -

கோவை: போர்க்­க­ள­மான உக்­ரே­னி­லி­ருந்து தப்பி தமி­ழகம் வந்­தி­ருக்­கும் 22 வயது மாணவி பார்­கவி தாம் பட்ட சிர­மங்­க­ளைச் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

கிழக்கு உக்­ரே­னிலுள்ள லிவிவ் பகு­தி­யில் செயல்­பட்டு வரும் டேனிலோ ஹாலிட்ஸ்கி லிவிவ் தேசிய மருத்­துவ பல்­க­லைக்­க­ழ­கத்­தில் 3ஆம் ஆண்டு மருத்­து­வம் பயின்று வந்த இவர், கோவை

கரு­மத்­தம்­பட்­டி­யைச் சேர்ந்­த­வர்.

பார்­கவி கூறு­கை­யில், "உக்­ரே­னின் லிவிவ் நக­ரில் தங்­கி­யி­ருந்­தேன். நான் இருந்த இடத்­துக்­கும், உக்­ரேன் தலை­ந­கர் கீவ்­வுக்­கும் 500 கி.மீ. தொலைவு.

"கீவ்­ நகரில் இருந்த பதற்­றம் நான் இருந்த இடத்­தில் இல்லை. இருப்­பி­னும் எப்­போது வேண்­டு­மா­னா­லும் இங்கு தாக்­கு­தல் நடக்க வாய்ப்­பி­ருக்­க­லாம் என்ற கார­ணத்­தில் உட­ன­டி­யாக சொந்த நாட்­டிற்­குத் திரும்ப முடிவு செய்­தேன்.

"ஆனால் உட­ன­டி­யாக புறப்­பட முடி­ய­வில்லை. நானும் சக மாண­வர்­களும் கல்­லூரி அறை­யி­லேயே ஐந்து நாள் அடைபட்டுக் கிடந் தோம்.

"ஐந்து நாள்களுக்கும் தேவை­யான உண­வை­யும் வாங்கி வைத்­துக்கொண்­டோம். அங்கு இருந்த ஒவ்­வொருநாளுமே உயி­ரைக் கையில் பிடித்­துக் கொண்­டும் ஒரு­வித பதற்­றத்­து­ட­னும் உறைந்­தி­ருந்­தோம். பின்­னர் கையில் வைத்­தி­ருந்த பணத்தை வைத்து, எனது நண்­பர்­க­ளு­டன் லிவி­வில் இருந்து பேருந்து மூலம் வெளி­யேறி எல்­லை­யில் உள்ள ஷாப் ரெயில் நிலை­யம் சென்­றோம்.

"ஆனால் ரயில் டிக்­கெட் எடுப்­ப­தற்கு ஒரு நாள் முழுவ­தும் காத்­தி­ருந்­தோம். பின்­னர் ஒரு­வ­ழி­யாக ஹங்­கேரி சென்று இந்­தி­யா­வின் சிறப்பு விமா­னத்­தில் நாடு திரும்­பி­னோம். எங்களுடன் பயின்ற சில மாணவர்கள் இன்னும் அங்கேயே இருக்கின்றனர். அவர்களையும் மீட்கவேண்டும்," என்­றார் அவர்.