மூன்று கிலோ தங்கநகைகள் கொள்ளை: நான்கு வடமாநில கொள்ளையர்கள் கைது

1 mins read
972c0def-8aff-4e99-9369-fdbf518d0a0a
கொள்ளை போன நகைகளுடன் கைதான மஹ்தாப் அலாம், பத்ருல், முகமது சுப்ஹான், திலாகாஸ். படம்: தமிழக ஊடகம் -

திருப்­பூர்: திருப்­பூர் மாவட்­டத்­தில் உள்ள நகை அட­குக் கடை ஒன்­றில் கடந்த வெள்­ளி­யன்று நடந்த கொள்­ளைச் சம்­ப­வத்­தில் மூன்று கிலோ தங்க நகை­கள் கொள்ளை போனது.

இச்­சம்­ப­வம் தொடர்­பில் மூன்று தனிப்­படை காவல்­துறை யின­ரால் தேடப்­பட்டு வந்த நான்கு வட மாநி­லக் கொள்­ளை­யர்­கள் பிடி­பட்­டுள்­ள­னர்.

மகா­ராஷ்­டி­ரா­வில் கைதான பீகார் மாநி­லத்­தைச் சேர்ந்த மஹ்­தாப் அலாம், 37, பத்­ருல், 20, முக­மது சுப்­ஹான், 30, திலா­காஸ், 20, ஆகி­யோ­ரி­டம் இருந்து கிலோ கணக்­கில் தங்க, வெள்ளி நகை­கள் மீட்­கப்­பட்­டுள்­ளன.

இவர்­களை நாக்­பூர் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­திய பின் ­னர், விசா­ரணைக்காக திருப்­பூர் அழைத்து வரு­கின்­ற­னர்.

திருப்­பூர், புது­ரா­ம­கி­ருஷ்ண புரத்­தைச் சோ்ந்தவா் ஜெய­குமாா், 45. இவா் திருப்பூா் யூனி­யன் மில் சாலை­யில் நகைக் கடை­யு­டன் நகை அட­குக் கடை­யை­யும் நடத்தி வரு­கிறாா். இக்கடை­யின் பின்­பு­றம் உள்ள வீட்­டில் வசித்து வந்த ஜெய­குமாா், அண்மையில் தான் வீட்­டைக் காலி செய்துள்ளாா்.

இத­னி­டையே, ஜெய­குமாா் வழக்­கம்­போல் வெள்­ளி­யன்று காலை­யில் கடை­யைத் திறந்து பாா்த்த­போது மூன்று கிலோ தங்­கம், ஒன்­பது கிலோ வெள்ளி, ரூ.25 லட்­சம் ரொக்­கம் ஆகி­யவை திரு­டப்­பட்­டது தெரி­ய­வந்­தது.