தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூன்றாம் வகுப்பு மாணவன் ஆசிரியர்கள் மீது புகார்

1 mins read
13ef4092-8f99-4e41-a216-5a5d9f913c4d
காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் அனிஸ். படம்: ஊடகம் -

ஹைத­ரா­பாத்: தம்மை ஆசி­ரி­யர்­கள் அடிப்­ப­தாக மூன்­றாம் வகுப்பு மாண­வன் காவல்­து­றை­யில் புகார் அளித்­தி­ருப்­பது தெலுங்­கா­னா­வில் விவா­தப் பொரு­ளாகி உள்­ளது.

அங்­குள்ள மக­பூபா நக­ரில் உள்ள தனி­யார் பள்­ளி­யில் படிக்கும் அனிஸ் என்ற சிறு­வன் முகக்­க­வ­சம் அணிந்து பையா­ராம் காவல் நிலை­யத்­துக்கு வந்­தி­ருந்­தான்.

அங்­கி­ருந்த உதவி ஆய்­வா­ளர் விவ­ரம் கேட்­ட­போது, தன்னை அறி­மு­கப்­ப­டுத்­திக் கொண்ட சிறு­வன் அனிஸ், பள்­ளி­யில் தன்­னு­டைய ஆசி­ரி­யர்­க­ளான சன்னி, வெங்­கட் ஆகிய இரு­வ­ரும் தம்மை அடிப்­ப­தாக புகார் தெரி­வித்­தான்.

இதைக்­கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்­து­றை­யி­னர் சிறு­வ­னு­டன் பள்­ளிக்­குச் சென்று விசா­ரணை மேற்­கொண்­ட­னர்.

பின்­னர் சம்­பந்­தப்­பட்ட ஆசிரி­யர்களிடம் மாணவர்களைத் துன்­பு­றுத்­தக்­கூ­டாது என அறி­வுரை வழங்­கிய உதவி ஆய்­வா­ளர், மாண­வர்­கள் ஒழுக்­கங்களுடன் நடந்து கொள்ள வேண்­டும் என அனிஸுக்கும் அறி­வு­றுத்­தி­னர்.

சிறு­வன் அனிஸ் காவல் நிலை­யத்­தில் புகார் அளிக்­கும் காணொ­ளிப் பதிவு இணை­யத்­தில் வெளி­யா­கி­யுள்­ளது.

சிறு­வ­னின் இந்­தத் துணிச்­ச­லான செயல்­பாடு தெலுங்­கானா மக்­களை வியப்­பில் ஆழ்த்தி உள்­ளது.

இந்­தக் காணொ­ளிப் பதிவை ஏரா­ள­மா­னோர் பார்த்து ரசித்­த­து­டன் பர­வ­லா­கப் பகிர்ந்­தும் வரு­கின்­ற­னர்.