10,000 பேருக்கு பிரசாதமாக வழங்கப்பட்ட பிரியாணி

10,000 பேருக்கு பிரசாதமாக வழங்கப்பட்ட பிரியாணி

1 mins read
dccebbb7-5c93-462b-8065-6d8c4a0fb6df
பிரியாணி பிரசாதம் பெறும் பொதுமக்கள். படம்: ஊடகம் -

மதுரை: மதுரை அருகே முனி­யாண்டி கோவில் விழா­வில் 10 ஆயி­ரம் பேருக்கு பிரி­யாணி பிரசா­த­மாக வழங்­கப்­பட்­டது.

மதுரை மாவட்­டம், வடக்­கம்­பட்டி கிரா­மத்­தைச் சேர்ந்த பலர் தமி­ழ­கம் முழு­வ­தும் முனி­யாண்டி விலாஸ் என்ற பெய­ரில் அசைவ உண­வ­கங்­களை நடத்தி வரு­கின்­ற­னர்.

சிலர் வெளி மாநி­லங்­கள், வெளி­நா­டு­க­ளி­லும் இதே பெய­ரில் உண­வ­கங்­க­ளைத் திறந்­துள்­ள­னர்.

இவர்­கள் அனை­வ­ரும் ஆண்­டு­தோ­றும் வடக்­கம்­பட்டி முனி­யாண்டி சுவாமி கோவி­லில் ஒன்­று­கூடி பிரி­யாணி திரு­வி­ழாவை நடத்­து­கின்­ற­னர். இதில் அப்­ப­குதி மக்­கள் திர­ளா­கப் பங்­கேற்­பது வழக்­கம். இச்­ச­ம­யம் பத்­தா­யி­ரம் பேருக்கு அங்­கேயே பிரி­யாணி சமைக்­கப்­பட்டு பிர­சா­த­மாக வழங்­கப்­ப­டு­கிறது.

இந்த ஆண்­டும் முனி­யாண்டி விலாஸ் உண­வ­கங்­கள் நடத்தி வரு­வோர், மது­ரை­யில் தங்­கள் குடும்­பத்­தா­ரு­டன் திரண்­டுள்­ள­னர்.

திரு­வி­ழா­வை­யொட்டி மேள­தாளத்­து­டன் பால் குடம், பூத்­தட்டு ஊர்­வ­லம் நடை­பெற்­றது. பின்­னர் உண­வக உரி­மை­யா­ளர்­கள் நேர்த்­திக்­க­ட­னாக வழங்­கிய 115 ஆடு­கள், 523 கோழி­கள் பலி­யி­டப்­பட்டு, பிரி­யாணி சமைக்­கும் சமை­யல் கலை­ஞர்­க­ளின் கைப்பக்குவத்­தில் 2,000 கிலோ அரி­சி­யைக் கொண்டு பிரி­யாணி தயா­ரிக்­கப்­பட்டு, பின்­னர் விடிய விடிய பிர­சா­தம் வழங்­கப்­பட்­டது.

மதுரையில் முதல் முனியாண்டி விலாஸ் உணவகம் கடந்த 1937ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.