தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.1,000 கோடியில் அறைகலன் பூங்கா; மூன்றரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு இந்தியாவிலேயே முதன்முதலாக மிதக்கும் சூரிய ஒளி மின்நிலையம்

2 mins read
e86281d9-a093-4e27-b341-eafd596bd644
தூத்­துக்­கு­டி­யில் 75 ஏக்­கர் பரப்­ப­ள­வி­லான இரு பெரிய நீர்த்­தேக்­கங்­களில் அமைக்கப்பட்டுள்ள மிதக்­கும் சூரிய ஒளி மின் நிலை­யம். படம்: தமிழக ஊடகம் -

தூத்­துக்­குடி: இந்­தி­யா­வி­லேயே தூத்­துக்­கு­டி­யில் முதல்­மு­றை­யாக அமைக்­கப்­பட்­டுள்ள மிதக்­கும் சூரிய ஒளி மின்­நி­லை­யத்தை முதல்­வர் மு.க.ஸ்டா­லின் நேற்று திறந்து வைத்­தார்.

தூத்­துக்­கு­டி­யில் உள்ள ஸ்பிக் தொழிற்­சாலை வளா­கத்­தில் 75 ஏக்­கர் பரப்­ப­ள­வி­ல் இரு பெரிய நீர்த்­தேக்­கங்­களில் இந்த சூரிய ஒளி மின்நிலை­யம் அைமந்­துள்­ளது.

இந்நிலை­யத்­தில் இருந்து நாள் ஒன்­றுக்கு 22 மெகா­வாட் மின் உற்­பத்தி தயா­ரிக்­கப்­பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

ரூ.150 கோடியே 40 லட்­சம் மதிப்­பீட்­டில் ஆண்­டுக்கு 42.0 மில்­லி­யன் யூனிட் மின்­சா­ரத்தை உற்­பத்தி செய்து, அதனை ஸ்பிக் தொழிற்­சா­லை­க­ளி­லேயே பயன்­படுத்­தும் வித­த்தில் இந்த மிகப்­பெ­ரிய சூரிய மின்­சக்தி நிலை­யம் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

நீரின் குளிர்ச்­சியைச் சாத­க­மாக்குவதன் மூலம் அதிக மின் உற்­பத்­திக்கு மிதக்கும் சூரிய மின் நிலையம் வழி­வகுக்­கும். நீர்த்­தேக்­கத்­தில் உள்ள நீர் ஆவி­யா­கா­மல் 60% அளவுக்குக் கட்­டுப்­படுத்­து­வதன் மூலம் சுற்­றுச்சூழல் நன்­மைக்­கும் இத்­திட்­டம் உதவும் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.

தூத்­துக்­கு­டிக்கு இரண்டு நாள் பய­ண­மாக வந்­துள்ள முதல்­வர் மு.க.ஸ்டா­லின், நேற்று முன்­தி­னம் மறைந்த முன்­னாள் முதல்­வ­ரும் தனது தந்­தை­யு­மான மு.கரு­ணா­நிதியின் வெண்­க­லச் சிலை­யைத் திறந்துவைத்­தார்.

இத­னைத்தொடர்ந்து, தூத்­துக்­கு­டி­யில் நாட்­டின் முதல் அனைத்­து­லக அறை­க­லன் பூங்காவுக்கு அவர் அடிக்­கல் நாட்­டி­னார்.

அப்­போது பேசிய முதல்வர், "தமிழ்­நாட்­டின் முன்னேற்­றமே அர­சின் இலக்கு," என்றவர், மக்­க­ளி­டம் செல், மக்­க­ளு­டன் வாழ் என்ற தாரக மந்­தி­ரத்­து­டன் தான் செயல்­ப­டு­வ­தாகக் கூறினார்.

தூத்துக்குடி சிப்காட் வளா கத்தில் ரூ.1,000 கோடியில் 1,150 ஏக்கர் பரப்பளவில் மூன்­றரை லட்­சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள அறைகலன் பூங்காவுக்கும் (பர்னிச்சர் பார்க்) முதல்வர் நேற்று அடிக்கல் நாட்டினார்.

அப்போது தூத்துக்குடியில் ரூ.4,488 கோடி மதிப்பீட்டில் 14 நிறுவனங்கள் தொழில் முதலீடு செய்தன. இதற்­காக 33 நிறு­வ­னங்­களு­டன் முதல்வர் மு.க.ஸ்டா­லின் முன்­னி­லை­யில் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தாகின.