'என்கவுன்டர்': ஆயிரம் ரவுடிகளுக்கு எச்சரிக்கை

'என்கவுன்டர்': ஆயிரம் ரவுடிகளுக்கு எச்சரிக்கை

2 mins read
e076889e-21ba-4f78-9655-368901ab7638
-

சென்னை: குற்­றச்­செ­யல்­களில் தொடர்ந்து ஈடு­படும் ரவு­டி­கள் 'என்­க­வுன்­டர்' செய்­யப்­ப­டு­வார்­கள் என சென்னை காவல்­துறை கடும் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

இதை­ய­டுத்து ஆயி­ரம் ரவு­டி­க­ளைக் கொண்ட பட்­டி­யலை தயார் செய்­துள்ள காவல்­துறை, ரவு­டி­க­ளுக்கு அடைக்­க­ல­மும் ஆத­ர­வும் அளிப்­ப­வர்­கள் மீதும் கடும் நட­வ­டிக்கை பாயும் என தெரி­வித்­துள்­ளது.

சென்­னை­யில் இதற்கு முன்பு சில ரவு­டி­கள் காவல்­து­றை­யால் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­னர். இந்­நி­லை­யில், சென்­னை­யி­லும் அதன் புற­ந­கர்ப் பகு­தி­க­ளி­லும் கொலைச் சம்­ப­வங்­களில் ஈடு­படும் இளை­யர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது. மேலும் பல இளை­யர்­கள் பல்­வேறு குற்­றச் செயல்­களில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

இத­னால் கவலை அடைந்­துள்ள காவல் ஆணை­யர் சங்­கர்­ஜி­வால், சென்­னை­யில் உள்ள ரவு­டி­க­ளின் பட்­டி­யலை முழு­மை­யாக சேக­ரித்து தலை­ம­றை­வாக உள்ள ரவு­டி­கள் மீதும் கடும் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என அதி­ரடி உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளார்.

இதை­ய­டுத்தே ஆயி­ரம் ரவு­டி­க­ளைக் கொண்ட பட்­டி­யல் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் அவர்­க­ளைப் பற்­றிய அனைத்து விவ­ரங்­களும் மின்­னி­லக்க வடி­வில் சேக­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

இளம் ரவு­டி­களை தீவி­ர­மா­கக் கண்­கா­ணிப்­பது, அவர்­க­ளது முந்­தைய குற்­றச்­செ­யல்­க­ளின் தன்­மையை ஆராய்ந்து, அதற்­கேற்ப கண்­கா­ணிப்பை தீவி­ரப்­ப­டுத்­து­வது உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­கள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன.

காவல்­து­றைக்கு ஒத்­து­ழைக்க மறுக்­கும் ரவு­டி­கள் மீது 'என்­க­வுன்­டர்' நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட வாய்ப்­புள்­ள­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இத­னால் சென்­னை­யில் உள்ள ரவு­டி­கள் கலக்­கத்­தில் உள்­ள­னர். அவர்­களில் பலர் தலை­ம­றை­வாகி விட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சென்­னை­யில் மேற்­கொள்­ளும் இந்த அதி­ரடி நட­வ­டிக்கை குறித்து கேள்­விப்­படும் பிற நக­ரங்­களில் உள்ள ரவு­டி­களும் அச்­சத்­தில் முடங்­கு­வர் என காவல்­துறை தரப்­பில் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, பல ரவு­டி­கள் இணைந்து குழு­வா­கச் (கேங்ஸ்­டர்) செயல்­ப­டு­வ­தை­யும் கவ­னத்­தில் கொண்­டுள்­ள­தா­க­வும் அத்­த­கைய குழுக்­க­ளைச் சேர்ந்­த­வர்­களும் அத்­து­மீ­றி­னால் நட­வ­டிக்கை பாயும் என காவல்­துறை எச்­ச­ரித்­துள்­ளது. இந்­ந­ட­வ­டிக்கை மூலம் குற்றச்­செ­யல்­களில் ஈடு­படும் இளை­யர்­க­ளின் எண்­ணிக்கை குறை­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.