இந்தோனீசியா, செஷல்ஸ் தீவில் 41 குமரி மீனவர்கள் சிறைபிடிப்பு

இந்தோனீசியா, செஷல்ஸ் தீவில் 41 குமரி மீனவர்கள் சிறைபிடிப்பு

2 mins read
f2199bf4-94a0-42fd-837e-f970ea1c303f
-

தூத்­துக்­குடி: ஆழ்­க­ட­லுக்கு மீன்­பிடிக்­கச் சென்ற கன்­னி­யா­கு­மரி மாவட்ட மீன­வர்­கள் 41 பேரை எல்லை தாண்டி மீன்­பி­டித்­த­தா­கக் கூறி இந்­தோ­னீ­சியா, செஷல்ஸ் தீவு கடற்­ப­டை­யி­னர் சிறை­பி­டித்­துள்­ள­னர்.

இரு வெவ்­வேறு சம்­ப­வங்­களில் ஒருமுறை எட்டு பேரும் மற்­றொரு முறை 33 பேரும் கைதாகி உள்­ள னர். இத­னால் கவ­லை­ய­டைந்து உள்ள மீன­வர்­க­ளின் குடும்­பத்­தி­னர், செஷல்ஸ் தீவு, இந்­தோ­னீ­சி­யா­வில் சிறை­பி­டிக்­கப்­பட்டு உள்ள மீன­வர்­களை மீட்க மத்­திய, மாநில அர­சு­கள் விரைந்து நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், இந்­தோ­னீ­சியா, செஷல்ஸ் நாடு­களில் கைது செய்­யப்­பட்­டுள்ள தமி­ழக மீன­வர்­க­ளை­யும் அவர்­க­ளது மீன்­பி­டிப் பட­கு­க­ளை­யும் உட­ன­டி­யாக விடு­விக்க உரிய நட­வ­டிக்கை மேற்­கொள்­ளும் படி மத்­திய வெளி­யு­ற­வுத் துறை அமைச்­சர் ஜெய்­சங்­க­ருக்கு முதல்­வர் மு.க.ஸ்டா­லின் கடி­தம் எழுதி­யுள்­ளார்.

குமரி மாவட்­டத்­தைச் சேர்ந்த ஆயி­ரக்­க­ணக்­கான மீன­வர்­கள் வெளி­மா­நி­லங்­க­ளி­லும் வெளி­நாடு களி­லும் 15 முதல் 60 நாள்­கள் வரை ஆழ்­க­ட­லில் தங்­கி­யி­ருந்து மீன்­பி­டித்து வரு­வது வழக்­கம்.

கடந்த 7ஆம் தேதி இந்­தோ­னீ சியா கடல் எல்­லை­யைக் கடந்து ருஷா தீவில் மீன்­பி­டித்­த­தா­கக் கூறி, குமரி மாவட்­டம், தூத்­தூ­ரைச் சேர்ந்த எட்டு மீன­வர்­களை இந்­தோ­னீ­சிய கட­லோ­ரக் காவல் அதி­கா­ரி­கள் கைது செய்­த­னர்.

அதே­போல், கடந்த பிப்­ர­வரி 22ஆம் தேதி கொச்­சி­யில் இருந்து மூன்று விசைப்­ப­ட­கு­களில் கன்­னி­யா­கு­மரி மாவட்­டம் தூத்­தூர், பூத்­துறை, சின்­னத் துறை­யைச் சேர்ந்த மீன­வர்­கள் உள்பட 33 பேர் மீன்­பி­டிக்­கச் சென்­ற­னர். சூறைக்­காற்று கார­ண­மாக திசை­மாறி சென்­ற­போது செஷல்ஸ் தீவில்­ உள்ள ராணு­வத்­தி­னர் இவர்­களை சிறை­பி­டித்­த­னர்.

இதற்­கி­டையே, இந்­திய கடல் எல்­லைக்­குள் நுழைந்து மீன் பிடித்­த­தாக இலங்­கை­யைச் சேர்ந்த ஐந்து மீன­வர்­களைக் கட­லோ­ரக் காவல் படை­யி­னர் கைது செய்­த­னர். பட­கை­யும் பறி­மு­தல் செய்­த­னர். நேற்று அவர்­கள் தூத்­துக்­குடிக்கு அழைத்து வரப்­பட்­ட­னர்.