தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாயை இழந்த குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் ஊட்டும் 'தாய்'

1 mins read
a308828c-699b-41f6-9d3b-00d76870b3e8
தாய்ப்பாலுக்கு ஏங்கும் குழந்தையுடன் சந்தியா. வாரந்தோறும் 25 கி.மீ. பயணம் செய்து இந்தக் குழந்தைக்கு இவர் தாய்ப்பால் ஊட்டுகிறார். படம்: தமிழக ஊடகம் -

வேலூர்: வேலூர் அரு­கே­யுள்ள கீழ் அர­சம்­பட்டு கிரா­மத்­தைச் சேர்ந்த விவ­சாயி ஒரு­வ­ரின் மனைவி, ஆறு மாதங்­க­ளுக்கு முன்பு சத்­து­வாச்­சா­ரி­யி­லி­ருக்­கும் தனி­யார் மருத்­து­வ­

ம­னை­யில் ஆண் குழந்தை ஈன்­றெ­டுத்­தார். ஆனால், பிர­ச­வித்த சில மணி நேரங்­க­ளி­லேயே அப்பெண் இறந்­து­விட்­டார். இத­னால், தாய்ப்­பா­லும் தாய்ப்­பா­ச­மும் கிடைக்­கா­மல் தந்­தை­யின் அர­வ­ணைப்­பி­லேயே குழந்தை வளர்­கிறது.

தமது மனைவி இறந்­து­விட்­ட­தை­யும் குழந்தை தாய்ப்­பா­லின்றி வளர்­வ­தை­யும் கால்­நடை மருத்­து­வர் ரவி­சங்­க­ரி­டம் கூறி வருத்­தப்­பட்­டி­ருக்­கி­றார் விவ­சாயி. இது குறித்து மருத்­து­வர், தம் மனைவி சந்­தி­யா­வி­டம் கூறி­யி­ருக்­கி­றார். கவ­லை­யுற்ற சந்­தியா, குழந்­தைக்கு தாய்ப்­பால் புகட்ட விரும்­பு­வ­தாக கண­வ­ரி­டம் தெரி­வித்­தார்.

அவ­ரும் அதை வர­வேற்று ஊக்­கு­விக்க, கடந்த 3 மாதங்­க­ளாக வாரம் ஒரு­முறை, தங்­க­ளது வீடு அமைந்­தி­ருக்­கும் காட்­பா­டி­யி­லி ருந்து சுமார் 25 கிலோ மீட்­டர் பயணம் செய்து கீழ் அர­சம்­பட்டு கிரா­மத்­தில் குழந்­தைக்­குத் தாய்ப்­பால் புகட்டி வரு­கி­றார் சந்­தியா.