'கடைக்கோடி மக்களையும் அரசு நிதி சென்றடைய வேண்டும்'

'கடைக்கோடி மக்களையும் அரசு நிதி சென்றடைய வேண்டும்'

2 mins read
05e05536-4acd-4354-ba73-20ea02902596
-

மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் முதல்வர் பேச்சு

சென்னை: தமி­ழக அரசு ஒரு ரூபாய் செல­விட்­டால், அது சிந்­தா­மல், சித­றா­மல் மாநி­லத்­தின் கடைக்­கோடி மக்­க­ளைச் சென்­ற­டைய வேண்­டும் என்­றும் அது­தான் சிறந்த நிர்­வா­கத்­திற்கு எடுத்­துக்­காட்­டாக அமைய முடி­யும் என்­றும் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கும் அரசு அதி­கா­ரி­க­ளுக்­கும் மக்­கள்தான் எஜ­மா­னர்­கள் என்­பதை மறந்துவிடக் கூடாது என்­றும் சென்­னை­யில் நடை­பெற்ற ஆட்­சி­யர், காவல்­துறை கண்­கா­ணிப்­பா­ளர்­கள் மாநாட்­டில் பேசும்­போது அவர் குறிப்­பிட்­டார்.

ஒவ்­வொரு மாவட்­டத்­தி­லும் நிறை­வேற்­றப்­பட வேண்­டிய புதிய திட்­டங்­கள் குறித்து அம்­மா­வட்ட ஆட்­சி­யர் அர­சுக்கு எடுத்­துக்­கூற வேண்­டும் என்­றும், ஒவ்­வொரு மாவட்­டத்­தி­லும் ஒவ்­வொரு வித­மான பொருள்­கள் கிடைக்­கும் நிலை­யில், அவற்றை எப்­ப­டிச் சந்தைப்­ப­டுத்­து­வது, அதன் மூலம் அர­சுக்­கான வரு­மா­னத்தை எப்­படி பெருக்­கு­வது என்­பது குறித்த ஆலோ­ச­னை­க­ளை­யும் அவர்­கள் தெரி­விக்க வேண்­டும் என்­றும் முதல்­வர் ஸ்டா­லின் கேட்­டுக் கொண்­டார்.

"விவ­சா­யி­கள், தொழி­லா­ளர்­கள், சிறு­தொ­ழில், பெருந்­தொ­ழில் உள்­ளிட்ட, அனை­வ­ருக்­கும் பய­ன­ளிக்­கக் கூடிய திட்­டங்­களை சுதந்­தி­ர­மாகத் தெரி­விக்­க­லாம்,

"மாவட்­டங்­களில் நிறை­வேற்­றப்­பட வேண்­டிய திட்­டங்­கள் குறித்த கள நில­வ­ரத்தை விரி­வாக எடுத்­து­ரைக்­க­லாம். அரசுத் திட்­டங்­க­ளின் பயன் மக்­களைச் சென்­ற­டை­கி­றதா என்­பதை உறுதி செய்­வது குறித்து தெரி­விக்க வேண்­டும்," என்­றும் முதல்­வர் ஸ்டா­லின் வலி­யு­றுத்­தி­னார்.

இம்­மா­நாட்­டில், அரசு செயல்­ப­டுத்­தும் பல்­வேறு திட்­டங்­கள் குறித்து விரிவாக விவா­திக்­கப்­பட்­டது.

மேலும் பல்­வேறு மாவட்­டங்­களில் அந்­தத் திட்­டம் எந்த அள­வில் உள்­ளது, மாவட்ட நிர்­வா­கம் எதிர்­நோக்­கும் பிரச்­சி­னை­கள், அவற்­றுக்­கான தீர்­வு­கள் குறித்­தும் விவா­திக்­கப்­பட்­ட­தாக அரசு வட்­டா­ரத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இதற்­கி­டையே, சமூக வலைத் தளங்­கள் மூலம் சாதி, மத மோதல்­கள் ஏற்­ப­டுத்த நினைப்­போர் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்­றும் முதல்­வர் ஸ்டா­லின் காவல்­து­றை­யைக் கேட்­டுக்­கொண்­டார். சாதி மோதல்­களை சட்­டம், ஒழுங்குப் பிரச்­சி­னை­யாக மட்­டும் பார்க்­கா­மல், அவற்றை சமூக ஒழுக்­கப் பிரச்­சி­னை­யாகப் பார்க்க வேண்­டும் என்­றும் காவல்­து­றைக்கு அவர் அறி­வு­றுத்­தி­னார்.

கிரா­மங்­களில் படிக்­காத இளை­ஞர்­க­ளால் மட்­டு­மல்­லாது, படித்­து­விட்டு வேலை­யில்லா இளை­ஞர்­க­ளா­லும் இம்­மா­தி­ரி­யான சாதி மோதல் பிரச்­சினை உரு­வா­கிறது என்­றும் மத மோதல்­க­ளைத் தடுப்­ப­தற்­கான காவல்­துறை பிரிவை கோவை மட்­டு­மல்­லா­மல் அனைத்து மாவட்­டங்­களிலும் ஏற்­ப­டுத்த ஆலோ­சிக்­கப்­படும் என்­றும் முதல்­வர் மேலும் கூறி­னார்.

குற்­றங்­க­ளின் விழுக்­காட்டை குறைப்­ப­தை­விட குற்­றங்­கள் நடக்­கா­மல் பார்த்­துக்கொள்ள வேண்­டும் என்று குறிப்­பிட்ட முதல்­வர் ஸ்டா­லின், தவறு செய்­த­வர்­கள் யாரும் தண்­ட­னை­யி­லி­ருந்து தப்பிவிடக்­கூ­டாது என்­றும் தடை செய்­யப்­பட்ட இயக்­கங்­களை தமி­ழ­கத்­தில் நுழைய விடா­மல் கவ­னித்­துக்கொள்­வது மிக­வும் முக்­கி­யம் என்­றும் கூறினார்.