உக்ரேனிலிருந்து திரும்பிய மாணவர்களை பூங்கொத்துடன் வரவேற்ற முதல்வர்

உக்ரேனிலிருந்து திரும்பிய மாணவர்களை பூங்கொத்துடன் வரவேற்ற முதல்வர்

1 mins read
8d879898-60a3-4544-b907-e8bc2516eca3
மாணவர்களை வரவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின். படம்: ஊடகம் -

சென்னை: உக்­ரே­னில் இருந்து திரும்­பிய தமி­ழக மாண­வர்­களை சென்னை விமான நிலை­யத்­தில் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் நேரில் வர­வேற்­றார்.

மாண­வர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் அவர் பூங்­கொத்து கொடுத்து வர­வேற்­ற­து­டன், அவர்­க­ளின் உடல்­ந­லம் குறித்­தும் விசா­ரித்­தறிந்­தார்.

உக்­ரே­னில் போர் தீவி­ர­ம­டைந்த நிலை­யில், அங்கு படித்து வந்த நூற்­றுக்­க­ணக்­கான தமி­ழக மாண­வர்­களை மீட்க வேண்­டும் என மத்­திய அர­சி­டம் தொடர்ந்து வலி­யுறுத்தி வந்­தார் முதல்­வர் ஸ்டா­லின்.

மேலும் தமி­ழக அர­சின் சார்­பில் மாண­வர்­களை மீட்­ப­தற்கு என சிறப்புக்­குழுவும் அமைத்­தார். அந்­தக் குழு­வில் திமுக மாநி­லங்களவை உறுப்­பி­னர் திருச்சி சிவா, தமி­ழக சட்­டப்­பே­ரவை உறுப்­பி­னர்­கள், ஐஏ­எஸ் அதி­கா­ரி­கள் ஆகி­யோர் இடம்­பெற்­றி­ருந்­த­னர்.

டெல்­லி­யில் முகா­மிட்ட இக்­கு­ழு­வி­னர், தமி­ழக மாண­வர்­க­ளுக்­குப் பல்­வேறு வகை­யி­லும் உத­வி­க­ளைச் செய்­த­து­டன், பத்­தி­ர­மாக சொந்த ஊர்­க­ளுக்கு அனுப்பி வைத்­த­னர்.

இந்­நி­லை­யில், உக்­ரே­னில் இருந்து மீட்­கப்­பட்டு டெல்லியில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்த தமி­ழக மாண­வர்­க­ளின் கடை­சிக்­குழு நேற்று முன்­தி­னம் சென்னை வந்­த­டைந்­தது. அவர்­களை முதல்­வர் ஸ்டா­லின் பூங்­கொத்து கொ­டுத்து வர­வேற்­ற­து­டன், அவர்­க­ளு­டைய பய­ணம் எப்­படி இருந்­தது எனக் கேட்­ட­றிந்­தார். மாண­வர்­க­ளுக்­குத் தேவை­யான அனைத்து உத­வி­க­ளை­யும் தமி­ழக அரசு செய்­யும் என அவர் ஆறு­தல் கூறி­னார்.

பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய திருச்சி சிவா, நாடு திரும்­பும் முன்­னர் தமி­ழக மாண­வர்­கள் மொழிப் பிரச்­சினை உள்­ளிட்ட பல்­வேறு சங்­க­டங்­களை எதிர்­கொண்­ட­தா­க­வும் டெல்லி வந்­த­டைந்த பின்­னர் தமி­ழக அரசு அதி­கா­ரி­கள் அவர்­க­ளுக்­குத் தேவை­யான உத­வி­க­ளைச் செய்­த­தா­க­வும் கூறி­னார்.